உலக நிலவரங்களால்'சென்செக்ஸ்' 249 புள்ளிகள் வீழ்ச்சிஉலக நிலவரங்களால்'சென்செக்ஸ்' 249 புள்ளிகள் வீழ்ச்சி ... நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதத்தில்நாட்டின் ஏற்றுமதி 34 சதவீதம் அதிகரிப்பு நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதத்தில்நாட்டின் ஏற்றுமதி 34 சதவீதம் அதிகரிப்பு ...
நாட்டின் சிமென்ட் உற்பத்தி 32 கோடி டன்னாக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2011
01:55

புதுடில்லி: நாட்டின் சிமென்ட் உற்பத்தி, நடப்பு நிதியாண்டில் இலக்கை விஞ்சி, 32 கோடி டன்னாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.அடிப்படைக் கட்டமைப்பு துறை வளர்ச்சிக்கு மத்திய அர” முன்னுரிமை அளித்து, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், குடியிருப்புகள், நெடுஞ்சாலைகள் உள்ளிட்டவற்றுக்கான கட்டுமானப் பணிகள், அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, சிமென்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.உலகிலேயே, சிமென்ட் உற்பத்தியில் இந்தியா, இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 1982ம் ஆண்டு, நாட்டின் சிமென்ட் உற்பத்தி, 6.40 கோடி டன்னாக இருந்தது. நடப்பு 2011-12ம் நிதியாண்டில் நாட்டின் சிமென்ட் உற்பத்தி, 29 கோடி டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சிமென்டிற்கான தேவை அதிகரித்து வருவதால், இத்துறை நிறுவனங்கள், சிமென்ட் உற்பத்தி திறனை அதிகரித்து வருகின்றன. மொத்த உற்பத்தியில், 80 சதவீத அளவிற்கு சிமென்ட் பயன்பாடு உள்ளது. நடப்பு நிதியாண்டில் சிமென்டிற்கான தேவைப்பாடு 8 - 9 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதையடுத்து, சிமென்ட் உற்பத்தியை நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, நடப்பு நிதியாண்டில் சிமென்ட் உற்பத்தி, இலக்கான 30 கோடி டன்னுக்கும் அதிகமாக, 31.50 - 32 கோடி டன்னாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உலகளவில் சிமென்ட் உற்பத்தியில், சீனா முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் உள்ள இந்தியாவில், 137 மிகப்பெரிய சிமென்ட் தொழிற்சாலைகளும், 365 சிறிய தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இவற்றில், ஒரு லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், பணியாற்றி வருகின்றனர். ஒரு சிமென்ட் தொழிற்சாலை, 10 லட்சம் டன் என்றளவில் சிமென்ட் உற்பத்தி திறனை அதிகரிக்க, சராசரியாக, 500 கோடி ரூபாய் செலவிடுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் நிறுவனங்களின் சிமென்ட் உற்பத்தி திறன், இரு மடங்கு அதிகரித்துள்ளது. இதனடிப்படையில், நாட்டின் சிமென்ட் உற்பத்தி திறன், வரும் 2020ம் ஆண்டில், 55 கோடி டன்னாக அதிகரிக்கும் என, சிமென்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)