பதிவு செய்த நாள்
14 மே2011
01:56
மும்பை: கடந்த ஒரு சில வாரங்களாக, அதிக ஏற்ற, இறக்கத்துடனும், மிகவும் மந்தமாக இருந்து வந்த பங்கு வர்த்தகம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்று, சூடுபிடித்து காணப்பட்டது. மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றிப் பெற்றுள்ளது. இதுதவிர, தமிழகத்தில் அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி, அறுதி பெரும்பான்மையுடன் வெற்றிப் பெற்றுள்ளது. மேலும், ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும், பங்கு வியாபாரம் சூடுபிடித்து காணப்பட்டது. இதுபோன்ற பல சாதகமான சூழ்நிலைகளால், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின. வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், வங்கி, ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம், பொறியியல், மருந்து, உலோகம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்திருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 195.49 புள்ளிகள் உயர்ந்து, 18,531.28 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 18,724.54 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 18,280.70 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், எச்.டீ.எப்.சி., இன்போசிஸ் டெக்னாலஜிஸ் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ஆகிய மூன்று நிறுவன பங்குகளின் விலை குறைந்தும், ஏனைய 27 நிறுவனப் பங்குகளின் உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 58.60 புள்ளிகள் அதிகரித்து, 5,544.75 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,605 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,472.15 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|