பதிவு செய்த நாள்
17 மே2011
17:00
புளூம்பெர்க் : ருவாண்டா நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் பொருட்டு, தாங்கள் செயல்பட உள்ளதாக ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, கிகாலி நகரில் பத்திரிகையாளர்களை சந்தித்த ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ரவிசந்திரா கூறியதாவது, ருவாண்டா நாட்டின் வளர்சசிக்காக 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்ய உள்ளதாகவும், இதன்மூலம் அடுத்த 5 ஆண்டுகளில், தங்க நகை வர்த்தகத்தை மேம்படுத்தும் விதத்திலும், வைர வர்த்தகத்திற்கான கட்டமைப்பை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதற்காக, ருவாண்டா அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். ஆப்ரிக்காவில், தங்க சுரங்கங்கள் அதிகமாக உள்ள காரணத்தினால், கோல்டு ரீபைனரி யூனிட்டை ஆப்ரிக்காவின் தெற்கு பகுதி மற்றும் ஐரோப்பாவில் அமைக்க திட்டமிட்டுள்ளோம். 2009ம் ஆண்டு கணக்கின்படி, ருவாண்டா, அந்த ஆண்டில் மட்டும் 20 கிலோ தங்கத்தை உற்பத்தி செய்ததாகவும், வருங்காலத்தில் இதை விரிவாக்க திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|