சுகுணா சிக்கன் நிறுவனத்துக்கு விருதுசுகுணா சிக்கன் நிறுவனத்துக்கு விருது ... 'சென்செக்ஸ்' 55 புள்ளிகள் அதிகரிப்பு 'சென்செக்ஸ்' 55 புள்ளிகள் அதிகரிப்பு ...
பங்கு வர்த்தகத்தில் தொடர்ந்து சுணக்க நிலை புதிய பங்கு வெளியீடுகளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.2,000 கோடி இழப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2011
00:06

மும்பை: நடப்பாண்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 12 புதிய பங்கு வெளியீடுகளில், 9 வெளியீடுகளில் பங்கேற்ற முதலீட்டாளர்கள், இழப்பைசந்தித்துள்ளனர். கடந்த ஆண்டு சிறப்பாக இருந்த இந்திய பங்குச்சந்தை, இவ்வாண்டு தொடக்கம் முதல் ஒரு நாள் ஏறுவதும், நான்கு நாள் இறங்குவதுமாக நிலையில்லாமல் காணப்படுகிறது. இந்த நிலையிலும், 12 நிறுவனங்கள் துணிச்Œலாக மூலதனச்சந்தையில் களமிறங்கி, பங்கு வெளியீட்டை மேற்கொண்டன. அவற்றில் ஒன்பது நிறுவனங்களின் பங்குகள், வெளியீட்டு விலையை விட குறைவாக விலை போ#க் கொண்டுள்ளன. மதிப்பின் அடிப்படையில், முதலீட்டாளர்களுக்கு 2,100 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், எஞ்சிய மூன்று புதிய பங்கு வெளியீடுகளில் பங்கேற்ற முதலீட்டாளர்களுக்கு, அவர்கள் கொண்டுள்ள பங்கின் மதிப்பு அடிப்படையில், ஒட்டுமொத்த அளவில், 433 கோடிரூபாய் உயர்ந்துள்ளதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது.இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்ட 12 புதிய பங்கு வெளியீடுகளில், அக்ரோபெடல் டெக்னாலஜிஸ், முதலீட்டாளர்களுக்கு அதிக இழப்பை தந்துள்ளது. இந்நிறுவனம், ஒரு பங்கின் வெளியீட்டு விலையை 90 ரூபாயாக நிர்ணயித்திருந்தது. பங்குச்சந்தையில் பட்டியலிட்ட இரு வாரங்களில், இப்பங்கின் விலை அதிகபட்Œமாக 156 ரூபா# வரை öŒன்றது. அதன் பின்னர் படிப்படியாக, 72சதவீதசரிவைக் கண்டு, தற்போது 25 ரூபா# என்ற அளவில் விலை போய்க்கொண்டுள்ளது.இதே போல், மூலதனச்சந்தையில் களமிறங்கி, பங்கு வெளியீட்டை மேற்கொண்ட ஷில்பி கேபிள் நிறுவனம், ஒரு பங்கின் விலையை 69 ரூபாயாக நிர்ணயித்திருந்தது. இப்பங்கின் விலை, 69சதவீதம்சரிந்து தற்போது, 22 ரூபாய் என்ற அளவில் கைமாறிக் கொண்டுள்ளது.காகிதம், செய்தித்தாள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும்சர்வலட்”மி பேப்பர் நிறுவனம், கடந்த மாதம் புதிய பங்கு வெளியீட்டை மேற்கொண்டது. பங்கு ஒன்று 29 ரூபாய் என்று விலை நிர்ணயம் öŒய்யப்பட்டது. இதன் பங்கின் விலை, தற்போது 50சதவீதம்சரிந்து, 15 ரூபாய்க்கு விலை போய்க்கொண்டுள்ளது.மின் உற்பத்தி திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கி வரும் பி.டி.சி. பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டிற்கு, பெரும் வரவேற்பு காணப்பட்டது. ஆனால், அது பங்கு வெளியீட்டிற்குப் பிறகு காணாமல் போய்விட்டது. 28 ரூபாய்க்கு வெளியிடப்பட்ட இப்பங்கு, தற்போது 18 ரூபாயாகசரிந்துள்ளது. இதேபோல், ஓம்கார் ஸ்பெஷல் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் பங்கின் விலை, 98 ரூபாயிலிருந்து 36சதவீதம்சரிந்து, 63 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. புதிய பங்கு வெளியீட்டை மேற்கொண்ட இன்னோவென்டிவ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதன் பங்கு ஒன்றின் விலையை 117 ரூபாய் என நிர்ணயித்திருந்தது. இது, தற்போது 21சதவீதம்சரிவைசந்தித்து 92 ரூபாய் என்ற அளவில் விலை போ#க் கொண்டுள்ளது. நடப்பாண்டில், உயர் மதிப்பில் பங்குகளை வெளியிடாமல், முகமதிப்பிலேயே பங்குகளை வெளியிட்ட நிறுவனம் என்ற சிறப்பை பியூச்சர் வென்ச்சர் நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவனம், அதன் பலத்தையும், பலவீனத்தையும் எடை போட்டு, முகமதிப்பிலேயே பங்குகளை வெளியிட்டுள்ளது என்பதை, தற்போது அதன் பங்கு விலையை வைத்து அறிந்து கொள்ளலாம். 10 ரூபாய்க்கு வெளியிடப்பட்ட இப்பங்கு, தற்போது 17சதவீதம்சரிந்து, 8 ரூபாயாக குறைந்துள்ளது. இதே போல், 35 ரூபாய்க்கு வெளியிடப்பட்ட பாரமவுன்ட் பிரின்ட் நிறுவனத்தின் பங்கு ஒன்று, தற்போது 32 ரூபா#க்கு விலை போய்க்கொண்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்த முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டிற்கு, முதலீட்டாளர்களிடையே பெரும் வரவேற்பு காணப்பட்டது. ஒரு பங்கின் விலை, 175 ரூபா# என நிர்ணயம் öŒய்யப்பட்டிருந்தது. மும்பை பங்குச்சந்தையில் பங்குகள் பட்டியலிடப்பட்ட அன்று, பங்கின் விலை, வெளியீட்டு விலையை விட அதிகமாக, 198 ரூபாய் வரை öŒன்றது. இது, தற்போது 160 ரூபாயாக குறைந்துள்ளது.முதலீட்டாளர்களுக்கு லாபம் ஈட்டித் தந்த 3 புதிய பங்கு வெளியீடுகளில், மிட்வேலி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. 70 ரூபாய்க்கு வெளியிடப்பட்ட இந்நிறுவனத்தின் பங்கு ஒன்று, தற்போது 72சதவீத உயர்வைக் கண்டு, 120 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோல், ”டர் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தின் பங்கின் விலை, 61சதவீதம் உயர்ந்து, 77 ரூபாயில் இருந்து 124 ரூபாயாக உயர்ந்துள்ளது. லவ்வபிள் லிங்கரி நிறுவனம், 205 ரூபாய்க்கு வெளியிடப்பட்ட பங்கு ஒன்றின் விலை, தற்போது, 309 ரூபாய்க்கு விலை போய்க்கொண்டிருக்கிறது. öŒயில், ஓ.என்.ஜி.சி. போன்ற மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனங்கள், பங்குச்சந்தை நிலையில்லாமல் உள்ளதைக் கருதி, அவற்றின் இரண்டாவது பங்கு வெளியீடுகளை தள்ளி வைத்துள்ளன. ஆனால், சிறிய நிறுவனங்கள் துணிந்து பங்கு வெளியீட்டை மேற்கொண்டு, முதலீட்டாளர்களை ஈர்த்து வருகின்றன. இதனால், விட்டில்பூச்சிகளாய் சிக்கும் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)