பதிவு செய்த நாள்
21 மே2011
10:44
மும்பை : இந்தியாவின் முன்னணி அக்ரோகெமிக்கல்ஸ் தயாரிப்பு மற்றும் வர்த்தக நிறுவனமான பேயர் கிராஃப்சயின்ஸ் நிறுவனம், மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த இந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் ரூ. 17.13 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பேயர் கிராஃப்சயின்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த நிதியாண்டின் இதேகாலகட்டத்தில் நிறுவனம் ரூ. 3.54 கோடி என்ற அளவிலேயே நஷ்டத்தை சந்தித்திருந்தது, ஆனால் தற்போது இந்த நிதியாண்டில் சரிவு ரூ. 17.13 கோடியாக பதிவாகி உள்ளது. நிறுவனத்தின் நஷ்டம் அதிகரித்திருந்த போதிலும், விற்பனை மற்றும் நிகரலாபம் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்த காலாண்டில், நிறுவனத்தின் வருமானம், ரூ. 229.87 கோடி என்ற அளவிலிருந்து ரூ. 236.51 கோடி என்ற அளவிற்கும், நிகரலாபம் ரூ. 127.25 கோடி என்ற அளவிலிருந்து ரூ. 131.54 கோடி என்ற அளவிற்கு அதிகரித்துள்ளதாகவும், இந்த நிதியாண்டின் ஒட்டுமொத்த வருமானம், ரூ. 1,724.10 கோடி என்ற அளவிலிருந்து ரூ. 2,139.27 என்ற அளவிற்கு அதிகரித்துள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|