பதிவு செய்த நாள்
21 மே2011
12:56
லண்டன் : பிரிட்டனில் கன்ஸ்ட்ரக்சன் பிரிவில் ஏற்பட்டுள்ள தொய்வு, கட்டிடப் பொருட்களின் கடுமையான விலையேற்றம், அங்கு தனது பிரிவை மீண்டும் கட்டமைக்க வேண்டிய தேவை உள்ளிட்ட காரணங்களினால் நிறுவனத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை ஈடுசெய்யும் விதமாக, 1,500 பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக டாடா ஸ்டீல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த டாடா ஸ்டீல் (ஐரோப்பிய செயல்பாடுகள்) நிர்வாக இயக்குனர் கார்ல் - உல்ரிச் கோஹ்லர் கூறியதாவது, வடகிழக்கு இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் தங்களது ஸ்கந்தோர்ப் யூனிட், கடந்த 2 ஆண்டுகளாக பெரும் சரிவை சந்தி்த்து வருவதாகவும், இனிவரும் காலத்தில், இந்த யூனிட்டின் செயல்பாடுகளை மேம்படுத்தும் பொருட்டு 400 மில்லியன் பவுண்ட் ஸ்டெர்லிங் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|