பதிவு செய்த நாள்
22 மே2011
02:01
விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் வத்தல் விலை குவிண்டாலுக்கு 400, துவரை மூடைக்கு 200 ரூபாய் குறைந்துள்ள நிலையில், ரவை மூடைக்கு 30 ரூபாய் உ யர்ந்துள்ளது. இதைதொடர்ந்து, மார்க்கெட்டில் மந்த நிலை நீடிப்பதால் சரக்கு வரத்தும், விற்பனையும் குறைந்து, தேக்கம் ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மார்க்கெட்டில் சர்க்கரை விலை மூடைக்கு 2795 ரூபாயாக உள்ளது. கடலெண்ணெய் டின்னுக்கு 1350, சூரியகாந்தி எண்ணெய் 1170, பாமாயில் 910 ரூபாயாக உள்ளது. நிலக்கடலைப் பருப்பு 4100, கடலைப் புண்ணாக்கு மூடை 2800 ரூபாயாகவும் உள்ளது. உளுந்து விலை மூடைக்கு 4900 லிருந்து 4800 ஆகவும், சுமார் ரக உளுந்து 4100 லிருந்து 4900, பர்மா பருவட்டு உளுந்து 5100 லிருந்து 4900. நயம் உளுந்தம் பருப்பு 6400, பர்மா பருவட்டு பருப்பு 6200 ரூபாயாக உள்ளது. துவரை 3800 லிருந்து 3600, பொடி துவரை 3000 லிருந்து 2800 ஆக குறைந்துள்ளது. துவரம் பருப்பு 5700, பொடி துவரம் பருப்பு 4600 ரூபாயாக உள்ளது. பாசிப்பயறு 6400 , லயன் பருவட்டு 3900, சுமார் ரகம் 3700 ரூபாயாக உள்ளது. பாசிப்பருப்பு 5700, சுமார் ரகம் 5500 ரூபாயாக உள்ளது. மைதா 2180, ரவை 2140 லிருந்து 2170 ரூபாயாக உயர்ந்துள்ளது. கொண்டைக்கடலை 2700, பொரிகடலை 2080 ரூபாயாக உள்ளது. மிளகாய் புது வத்தல் 8800 லிருந்து 8400 ஆக குறைந்துள்ளது. முண்டு வத்தல் 7800 லிருந்து 7,500 ரூபாயாக குறைந்துள்ளது. சோடை வத்தல் 3200, பழைய சோடை வத்தல் 2400 ரூபாயாக உள்ளது.'மிளகாய் வத்தல் வரத்து குறைந்து ,மார்க்கெட்டில் மந்த நிலை நிலவுவதால், விலை குறைந்துள்ளதாக,'வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|