பதிவு செய்த நாள்
21 மே2011
16:52
கராச்சி : பாகிஸ்தான் - சீனா நட்புறவை போற்றும் வகையில், ஸ்டேட் பேங்க் ஆப் பாகிஸ்தான் 20 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளது. சீனா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையோன நட்புறவு ஏற்பட்டு 60 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. இதனை கொண்டாடும் வகையில், ஸ்டேட் பேங்க் ஆப் பாகிஸ்தான் 20 ரூபாய் சிறப்பு நாணயத்தை வெளியிட்டுள்ளது. 30 மிமீ டயாமீட்டரும், 9.5 கிராம் எடை கொண்டதாக இந்த நாணயம் உருவாக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் ஒருபக்கத்தில், மெழுகினாலான பிறைவடிவமும், மறுபக்கத்தில், 5 முனைகள் கொண்ட நட்சத்திரமும் உள்ளது. நாணயத்தின் மேற்பக்கத்தில் 2011, ஙுஉஅகீ Oஊ கஅஓ இஏஐNஅ ஊகீஐஉNஈகுஏஐக என்று பொறிக்கப்பட்டுள்ளது. சீனாவின் முன்னணி மற்றும் மிகப்பெரிய கமர்சியல் வங்கியான இண்டஸ்டிரியல் அண்ட் கமர்ஷியல் பேங்க் ஆப் சீனா (ஐசிபிசி), பாகிஸ்தானின் கராச்சி மற்றும் இஸ்லாமாபாத் நகரங்களில் கிளைகள் அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இஸ்லாமாபாத்தில், வங்கி கிளை திறப்பு விழாவில் தலைமையுரையாற்றிய பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கூறியதாவது, சீனாவின் முன்னணி வங்கி, பாகிஸ்தானில் கிளை அமைக்க முன்வந்திருப்பது இருநாடுகளுக்கிடையேயான உறவை பலப்படுத்த உதவும் என்று கூறினார். வங்கி உயர் அதிகாரி கூறியதாவது, இதன்மூலம், சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவு அதிகரிக்கும் என்றும், இந்த முயற்சி, வரலாற்றின் மைல்கல் என்றும் அவர் தெரிவித்தார். சீனா, பாகிஸ்தான் இடையேயான ராணுவ உறவுகள் அதிகரித்து வருவது, இந்தியாவுக்கு மிகவும் கவலை தரும் விஷயமே. இருந்தாலும், இந்த சவாலைச் சந்திக்க, இந்தியா, தன்னுடைய திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் என்று இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி கூறியிருக்கும் நிலையில், பாகிஸ்தான் இந்த சிறப்பு நாணயத்தை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|