பதிவு செய்த நாள்
22 மே2011
02:05
புதுடில்லி:நாட்டின் காபி ஏற்றுமதி, வரும் 2011-12ம் ஆண்டு காபி பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்), 2.40 லட்சம் டன்னாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, சென்ற காபி பருவத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 16.7 சதவீதம் குறைவாக இருக்கும் என அமெரிக்க வேளாண் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள் ளது. சென்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த, காபி பருவத்தில், நாட்டின் காபி உற்பத்தி 3.05 லட்சம் டன்னாக இருந்தது. இது வரும் காபி பருவத்தில், 2.89 லட்சம் டன்னாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சென்ற காபி பருவத்தின் இறுதியில், 1,080 டன் காபி கையிருப்பில் இருந்தது.நடப்பு பருவத்தில், காபி அதிகளவில் உற்பத்தியாகும் பகுதிகளில், பூச்சி தாக்குதல் இருந்ததால், இவ்வாண்டு காபி உற்பத்தி குறையும் என அமெரிக்க வேளாண் துறை தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|