பதிவு செய்த நாள்
26 மே2011
14:45
புதுடில்லி : பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதையடுத்து, டீசல் மற்றும் சமையல் காஸின் விலையையும் உயர்த்த மத்திய அரசு தி்ட்டமிட்டுள்ளது. இதற்காக, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அதிகாரம் கொண்ட அமைச்சர்கள் குழு, அடுத்த மாதம் 9ம் தேதி கூடி விவாதிக்க உள்ளது. இந்த குழு, சிறிது நாட்களுக்கு முன்பு கூடுவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் இது ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த குழு கூட்டம், ஜூன் மாதம் 9ம் தேதி நடைபெற உள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில், எவ்வளவு உயர்த்தலாம் என்று விவாதிக்கப்பட்டு பின் முறையான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச அளவில் தொடர்ந்து கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருவதால், இந்த விலை உயர்வு தவிர்க்கமுடியாதது என்று பிரணாப் முகர்ஜி ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|