பதிவு செய்த நாள்
27 மே2011
00:01
சென்னை: யுகா ஹோம்ஸ் நிறுவனம், ஓ.எம்.ஆர்., என்று சுருக்கமாக அழைக்கப்படும் பழைய மகாபலிபுரம் சாலை அருகே உள்ள தையூரில் 'ஆல்டா விடா' என்ற புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை அமைக்கவுள்ளது.இது குறித்து இந்நிறுவனத்தின் தலைவர் ஆர்.விஸ்வநாதன் கூறியதாவது:இப்புதிய குடியிருப்பு 5 ஏக்கர் பரப்பளவில், 200 கோடி ரூபாய் திட்ட செலவில் அமைக்கப்பட உள்ளது. இதில், ஒன்று முதல் மூன்று படுக்கையறைகள் கொண்ட, 600 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப, 570 முதல் 1,300 சதுரடி வரையிலான வீடுகள் அமைக்கப்படவுள்ளன.ஒரு சதுரடி விலை, 2,500 ரூபாயிலிருந்து துவங்குகிறது. இந்த நவீன வகை அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை, குறைந்தபட்சம் 15 லட்சம் ரூபாய் முதல் அதிகபட்சம் 32 லட்சம் ரூபாய் வரையில் இருக்கும். இத்திட்டத்தின் முதல் கட்ட பணிகள் வரும் 2013ம் ஆண்டுக்குள் நிறைவு பெறும்.இவ்வாறு விஸ்வநாதன் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|