டீசல், காஸ் விலை உயர்வு நிச்சயம் : மத்திய அரசு  டீசல், காஸ் விலை உயர்வு நிச்சயம் : மத்திய அரசு ... ஏ.டி.எம்.,ல் பணம் எடுப்பதில் இடர்பாடு: பாதிக்கப்பட்டவருக்கு 7 நாளில் தீர்வு ஏ.டி.எம்.,ல் பணம் எடுப்பதில் இடர்பாடு: பாதிக்கப்பட்டவருக்கு 7 நாளில் தீர்வு ...
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாநிகர லாபம் ரூ.1,252 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2011
00:40

சென்னை: தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுள் ஒன்றான, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டில், 1,252 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய நிதியாண்டில், 1,058 கோடி ரூபாயாக இருந்தது. ஆக, இவ்வங்கியின் நிகர லாபம், 19 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.இதே நிதியாண்டுகளில் இவ்வங்கியின் செயல்பாட்டு லாபம், 25.90 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2,058 கோடி ரூபாயிலிருந்து, 2,591 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நிகர வட்டி வருவாய், 109.27 சதவீதம் அதிகரித்து, 2,545 கோடி ரூபாயிலிருந்து, 5,326 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.சென்ற நிதியாண்டில், வங்கியின் மொத்த வணிகம், 2 லட்சத்து 69 ஆயிரத்து 225 கோடி ரூபாயிலிருந்து, 3 லட்சத்து 10 ஆயிரத்து 763 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில், திரட்டப்பட்ட டிபாசிட், 1 லட்சத்து 62 ஆயிரத்து 107 கோடி ரூபாயிலிருந்து, 1 லட்சத்து 79 ஆயிரத்து 356 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வழங்கப்பட்ட கடன்கள், 1 லட்சத்து 7 ஆயிரத்து 118 கோடி ரூபாயிலிருந்து, 1 லட்சத்து 31 ஆயிரத்து 407 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இவ்வங்கி, உலகளவில், ஜாம்பியாவில் மட்டும் ஒப்பந்த அடிப்படையில் செயல்பாட்டை கொண்டுள்ளது. இனி, ஹாங்காங், துபாய், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளிலும் கிளைகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என, இவ்வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எஸ்.ஸ்ரீதர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)