பதிவு செய்த நாள்
28 மே2011
00:40
சென்னை: தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுள் ஒன்றான, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டில், 1,252 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய நிதியாண்டில், 1,058 கோடி ரூபாயாக இருந்தது. ஆக, இவ்வங்கியின் நிகர லாபம், 19 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.இதே நிதியாண்டுகளில் இவ்வங்கியின் செயல்பாட்டு லாபம், 25.90 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2,058 கோடி ரூபாயிலிருந்து, 2,591 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நிகர வட்டி வருவாய், 109.27 சதவீதம் அதிகரித்து, 2,545 கோடி ரூபாயிலிருந்து, 5,326 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.சென்ற நிதியாண்டில், வங்கியின் மொத்த வணிகம், 2 லட்சத்து 69 ஆயிரத்து 225 கோடி ரூபாயிலிருந்து, 3 லட்சத்து 10 ஆயிரத்து 763 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில், திரட்டப்பட்ட டிபாசிட், 1 லட்சத்து 62 ஆயிரத்து 107 கோடி ரூபாயிலிருந்து, 1 லட்சத்து 79 ஆயிரத்து 356 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வழங்கப்பட்ட கடன்கள், 1 லட்சத்து 7 ஆயிரத்து 118 கோடி ரூபாயிலிருந்து, 1 லட்சத்து 31 ஆயிரத்து 407 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இவ்வங்கி, உலகளவில், ஜாம்பியாவில் மட்டும் ஒப்பந்த அடிப்படையில் செயல்பாட்டை கொண்டுள்ளது. இனி, ஹாங்காங், துபாய், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளிலும் கிளைகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என, இவ்வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எஸ்.ஸ்ரீதர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|