பதிவு செய்த நாள்
28 மே2011
14:29
மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த 16.12.2010 அன்று கரும்பு அரவை தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கரும்பு அரைத்ததில் 151 நாட்கள் வரை ஆலை இயங்கி உள்ளது. கடந்த 15.5.2011 அன்று அரவை சீசன் முடிந்தது. சர்க்கரை கட்டுமானம் 9.75 வரை கிடைத்துள்ளது. இந்த சீசனில் 1 லட்சத்து 84 ஆயிரத்து 553 டன் வரை கரும்பு அரைக்கப் பட்டுள்ளது. இதில் கள்ளக்குறிச்சி, செங்கல்வராயன், பெரம் பலூர் ஆலைகளில் இருந்து 25 ஆயிரம் டன் வரை இந்த ஆலைக்கு கரும்பு வரப் பெற்றதால்தான் நடப்பு வருட சீசனில் ஆலை தடங்கள் இல்லாமல் இயங்கியதற்கு காரண மாகும். தினமும் சுமார் 1500 டன் வரை கரும்பு அரைக்கப் பட்டுள்ளது. இந்த வருடம் 100 கிலோ கொண்ட சீனி மூடைகள் 1 லட்சத்து 79 ஆயிரத்து 270 வரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 1 டன் கரும்பு ரூ.1900-க்கு கொள்முதல் செய்யப் பட்டது. சர்க்கரை கட்டு மானத்தையொட்டி டன்னுக்கு ரூ.45 வரை கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதுபோக அரசு நிர்ணயிக்கும் தொகையிலானும் வரை உயர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|