பதிவு செய்த நாள்
03 ஜூன்2011
14:18
கோல்கட்டா : இந்தியாவின் முன்னணி சிமெண்ட் தயாரிப்பு மற்றும் வர்த்தக நிறுவனமான ஸ்ரீ சிமெண்ட் லிமிடெட் நிறுவனம், இந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில், விற்பனை 13 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக, ஸ்ரீ சிமெண்ட் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மார்ச் மாதத்துடன் முடிவடைந்த இந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் விற்பனை 13 சதவீதம் அதிகரித்து ரூ. 944 கோடி என்ற அளவிலிருந்து ரூ. 1070 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல், சிமெண்ட், கிளிங்கர் உள்ளிட்டவைகளின் விற்பனை 6 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக அதிகரித்துள்ளது. நான்காம் காலாண்டில், விற்பனை அதிகரித்திருந்த போதிலும், ஒட்டுமொத்த இந்த நிதியாண்டில், நிறுவனத்தின் விற்பனை சரிவு கண்டுள்ளது என்பதே உண்மை. 2009-10ம் நிதியாண்டில், ரூ. 3,362 கோடி என்ற அளவில் இருந்த விற்பனை ரூ. 3,511 கோடியாக குறைந்துள்ளது. விற்பனை குறைந்ததன் எதிரொலியாக, நிகரலாபம் 41 சதவீதம் குறைந்து ரூ. 1,578.35 கோடி என்ற அளவிலிருந்து ரூ. 932 கோடியாக சரிவடைந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|