நாட்டின் வேளாண் உற்பத்தி 6.6 சதவீதம் உயர்வுநாட்டின் வேளாண் உற்பத்தி 6.6 சதவீதம் உயர்வு ... ஜூலையில் பணவீக்கம் குறையும்:பொருளாதார கழகம் ஜூலையில் பணவீக்கம் குறையும்:பொருளாதார கழகம் ...
கொப்பரை வரத்து இல்லாததால் விலையிலும் மாற்றம் இல்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2011
09:47

பொள்ளாச்சி : வெளிமார்க்கெட்டில் கொப்பரை வரத்து அதிகரிக்காமலும், விலை உயராமலும் உள்ளதால் மார்க்கெட் மந்த நிலையில் உள்ளது.காங்கேயம் மார்க்கெட்டில் கடந்த 28ம் தேதி நிலவரப்படி, கொப்பரை கிலோவுக்கு 64 - 66 ரூபாய் வரையிலும் விலை கிடைத்தது. தேங்காய் பவுடர் கிலோவுக்கு 110 ரூபாயும், தேங்காய் எண்ணெய் 15 கிலோ டின்னுக்கு 1,415 - 1,420 ரூபாய் வரையிலும் விலை கிடைத்தது. விவசாயிகள் சொந்த பொறுப்பில் பறித்து உரித்த தேங்காய் டன்னுக்கு (மட்டை தவிர) 16,500 - 17,000 ரூபாய் வரையிலும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு உணவு தேவைக்காக அனுப்பப்படும் தேங்காய் டன்னுக்கு 16,000 ரூபாய் விலை கிடைத்தது.விவசாயிகள் சொந்த பொறுப்பில் பறித்து இருப்பு வைத்துள்ள தேங்காய் ஒன்றுக்கு 10.50 ரூபாயும், வியாபாரிகள் சொந்த பொறுப்பில் பறித்துக்கொள்ள 8.50 - 9.15 ரூபாய் வரையிலும் விலை கொடுக்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கொப்பரை கிலோவுக்கு 64 - 66.50 ரூபாய் வரையிலும் விலை கிடைத்தது. தேங்காய் எண்ணெய் 15 கிலோ டின்னுக்கு 1,430 ரூபாயும், தேங்காய் பவுடர் கிலோவுக்கு 98 ரூபாயும் விலை கிடைத்தது. விவசாயிகள் சொந்த பொறுப்பில் பறித்து உரித்து வைத்திருக்கும் தேங்காய் டன்னுக்கு 17,500 - 18,000 ஆயிரம் ரூபாய் வரையிலும் விலை கிடைத்தது. சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு உணவுத்தேவைக்காக அனுப்பப்படும் தேங்காய் டன்னுக்கு 16,500 ரூபாய் விலை கொடுக்கப்பட்டது. விவசாயிகள் சொந்த பொறுப்பில் பறித்து இருப்பு வைத்திருக்கும் தேங்காய் ஒன்றுக்கு 10.50 ரூபாயும், வியாபாரிகள் சொந்த பொறுப்பில் பறித்துக்கொள்வதற்கு ஒரு தேங்காய்க்கு 9.50 ரூபாயும் விலை கொடுக்கப்பட்டது. கொப்பரை உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, கொப்பரை வரத்தும் அதிகரிக்கவில்லை, கொப்பரை விலையும் உயரவில்லை. கடந்த வாரத்தில் இருந்து வியாபாரிகளும், இடைத்தரகர்களும் 'சிண்டிக்கேட்' அமைத்துள்ளதால் கொப்பரை விலை உயராமல் உள்ளது. இந்நிலையில், கோடை மழை சீசன் துவங்கியுள்ளது. மழையால் இந்த வாரம் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மழை தொடர்ந்தால் அடுத்த வாரத்தில் கொப்பரை உற்பத்தி பாதிக்கும். அதனால் கொப்பரை விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது' என்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)