பதிவு செய்த நாள்
06 ஜூன்2011
00:13
சென்னை:மொபைல் போன் சாதனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ள நோக்கியா நிறுவனம், சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அதன் தொழிற்சாலையிலிருந்து, இரட்டை 'சிம்' வசதி கொண்ட நவீன வகை மொபைல் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து இந்நிறுவனத்தின் சென்னை உற்பத்தி பிரிவின் தலைமை நிர்வாகி பிரகாஷ் கடாமா கூறியதாவது:இரட்டை சிம் வசதியுடன், இன்டர்நெட் பிரியர்களுக்கென, 'நோக்கியா சி2-00' மற்றும் இசை பிரியர்களை கவரும் வகையில், 'நோக்கியா எக்ஸ்1-01' ஆகிய இரண்டு மொபைல் போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 'நோக்கியா சி2-00' வகை மொபைல் போன்களில், 32 ஜி.பி., வரையிலான புகைப்படங்கள் வீடியோ மற்றும் மியூசிக் பைல்களை சேமித்து வைக்கலாம். இது மட்டுமின்றி, இன்டர்நெட் பிரவுசிங் செய்து இ-மெயில் கடிதங்களை பரிமாறிக் கொள்ளலாம். 'நோக்கியா எக்ஸ்1-01' மொபைல் போன்களில், நிதி சார்ந்த சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில், 'நோக்கியா மணி' என்ற புதிய வசதி உள்ளது. மேலும், 16 ஜி.பி., வரையிலான மெமரி, 36 மணி நேரம் நீடிக்கும் ஜம்போ பேட்டரி மற்றும் இசையை அதிக ஒலியில் தெளிவாக கேட்கும் தொழில்நுட்பம் ஆகியவை, இந்த மொபைல் போனில் உள்ளது.இவ்வகை மொபைல் போன்கள், எல்லாரும் வாங்கக் கூடிய விலையில், 2,000 முதல் 3,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு கடாமா தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|