பதிவு செய்த நாள்
06 ஜூன்2011
00:10
சென்னை;தென்னிந்தியாவில் செலாவணி பரிமாற்ற சேவைகளை வழங்குவதற்காக, ரிலையன்ஸ் மணி நிறுவனம், மினி முத்தூட் பைனான்சியர்ஸ் நிறுவனத்துடன், ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதுகுறித்து ரிலையன்ஸ் மணி இயக்குனர் விக்ராந்த் குக்நானி மற்றும் மினி முத்தூட் பைனான்சியர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராய் எம்.மேத்யூ கூட்டாக தெரிவித்ததாவது:இந்தியா முழுவதும் நடைபெறும் செலாவணிகளின் பரிமாற்றத்தில், தென்னிந்தியாவின் பங்களிப்பு 50 சதவீதமாக உள்ளது. எனவே, தென் பிராந்தியத்தில் எங்களுக்கான வர்த்தக வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என நம்புகிறோம்.தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா மற்றும் கோவா உள்ளிட்ட மாநிலங்களில் மினி முத்தூட் பைனான்சியர்ஸ் நிறுவனத்திற்கு 400 க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. இதன் வாயிலாக, 200க்கும் அதிகமான நாடுகளிலிருந்து செலாவணிகளின் பரிமாற்ற சேவைகளை, தென்னிந்திய வாடிக்கையாளர்கள் எளிதில் பெறலாம். அடுத்த ஓராண்டில் வர்த்தகத்தை இரு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|