பதிவு செய்த நாள்
07 ஜூன்2011
00:30
சென்னை:தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான பாதுகாப்பு சாதனங்கள், இணையதளம் சார்ந்த சாப்ட்வேர்கள் உள்ளிட்டவற்றின் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் மைக்ரோ டெக்னாலஜீஸ் நிறுவனம், அதன் வர்த்தகத்தை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் விரிவாக்கம் செய்துள்ளது. இதற்காக, எஸ்-மார்ட் என்ற பல்பொருள் விற்பனை குழுமத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இது குறித்து, மைக்ரோ டெக்னாலஜீஸ் தலைமை அதிகாரி (விற்பனை) ஆதித்யா கூறியதாவது: இந்த ஒப்பந்தம் மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள எஸ்-மார்ட் நிறுவனத்தின், 150க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்களிடம் மைக்ரோ பாதுகாப்பு சாதனங்கள் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கேற்ப, 250க்கும் மேற்பட்ட பல்வேறு பாதுகாப்பு சாதனங்களை உருவாக்கியுள்ளோம். உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் இந்த சாதனங்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. சிறந்த தயாரிப்பிற்கான, பல விருதுகளையும் நிறுவனம் பெற்றுள்ளது. இவ்வாறு ஆதித்யா கூறினார். எஸ் மார்ட், மின்னணு சாதனங்கள் விற்பனையில் பத்தாண்டுகளுக்கும் மேலான அனுபவத்தை கொண்டுள்ளது. பாதுகாப்பு சார்ந்த அனைத்து விதமான சாதனங்களையும், முகவர்களிடம் பெற இந்த ஒப்பந்தம் வழி வகுக்கும் என்று, எஸ் மார்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எஸ்.முத்துராஜ் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|