பதிவு செய்த நாள்
07 ஜூன்2011
15:55
மும்பை : தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் சரிவில் துவங்கிய வர்த்தகம் இறுதியில் ஏற்றத்துடன் முடிவடைந்தது. இன்றைய வர்த்தகநேர இறுதியில் மும்பை பங்குச்சந்தை 75.51 புள்ளிகள் ஏற்றம் பெற்று 18495.62 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 24.10 புள்ளிகள் அதிகரித்து 5556.15 என்ற அளவிலும் முடிவடைந்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், சன்பார்மா, சிப்லா, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், டிசிஎஸ், டாடா ஸ்டீல், ஆக்சிஸ் பேங்க், மகிந்திரா பேங்க், ஐடிசி, டிஎல்எப், ஜேஎஸ்பிஎல், ஹிண்டால்கோ, ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎப்சி, பஞ்சாப் நேஷனல் பேங்க், ஸ்டெர்லைட், ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரெக்சர், ரான்பாக்சி லேப்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் ஏறுமுகத்திலும், லார்சன் அண்ட் டூப்ரோ, விப்ரோ, இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், என்டிபிசி, ஹீரோ ஹோண்டா, பீஹெச்இஎல், செயில், பார்தி ஏர்டெல், ஏசிசி, பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் இறங்குமுகத்திலும் இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|