பதிவு செய்த நாள்
08 ஜூன்2011
01:45
மும்பை:நடந்து முடிந்த ஐ.பி.எல் - 4 கிரிக்கெட்போட்டியில், வீரர்களுக்கு ஏற்பட்ட காயங்கள், ஆட்டங்கள் ரத்து போன்றவற்றிற்காக காப்பீட்டு நிறுவனங்கள், 8கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உள்ளன.இந்தியாவில் கடந்த மாதத்தில் முடிவடைந்த ஐ.பி.எல் - 4 சீசன் கிரிக்கெட்போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இத்தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் இடையிலானபோட்டி, மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் இப்போட்டிக்காக காப்பீடு செய்திருந்த ராயல்சேலஞ்சர்ஸ் அணிக்கு, ஓரியண்டல் இன்‹ரன்ஸ் நிறுவனம் 3கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டி உள்ளது. அதுபோல், இப்போட்டியை ஒளிபரப்ப இயலாமல்போனதால், சோனி நிறுவனத்திற்கு வர்த்தக ரீதியில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காகநேஷனல் இன்‹ரன்ஸ் நிறுவனம், சோனி நிறுவனத்திற்கு 5கோடிரூபாய் இழப்பீடு வழங்க உள்ளது. ஐ.பி.எல் - 4 கிரிக்கெட்போட்டியில் பங்கேற்ற அனைத்து அணிகளும், ஒவ்வொருபோட்டிக்கும் 3கோடி ரூபாய் முதல் 7கோடி ரூபாய் வரை, காப்பீடு செய்து கொண்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|