பதிவு செய்த நாள்
11 ஜூன்2011
00:00
சென்னை; நாட்டின் பல்வேறு துறைகளின் செயல்பாடு, குறைந்து போனதையடுத்து, சென்ற ஏப்ரல் மாதத்தில், தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 6.3 சதவீதமாக சரிவடைந்துள்ளது. 2004-05ம் நிதியாண்டை அடிப்படையாக கொண்டு, புதிய தொழில்துறை குறியீட்டு எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஏப்ரல் மாதத்தில், தொழில் துறை உற்பத்தி 6.3 சதவீதமாக குறைந்து போயுள்ளது. முன்பு, 1993-94ம் நிதியாண்டின் அடிப்படையில், தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் கணக்கிடப்பட்டு வந்தது. இதனடிப்படையில், கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 16.6 சதவீதமாக இருந்தது. இது, நடப்பாண்டு, ஏப்ரல் மாதத்தில், 4.4 சதவீதமாக மிகவும் குறைந்து போயுள்ளது. இவ்வாண்டு மார்ச் மாதத்தில்,தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி, தற்காலிக மதிப்பீட்டின் அடிப்படையில், 7.3 சதவீதமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இது, மறு மதிப்பீட்டில், 7.8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் கணக்கிடுவதில், தயாரிப்பு துறையின் பங்களிப்பு 80 சதவீதமாக உள்ளது. இத்துறையின் வளர்ச்சி, சென்ற ஏப்ரல் மாதத்தில், 4.4 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே மாதத்தில், 18 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகமாக இருந்தது. இதே மாதங்களில், சுரங்கத்துறையின் உற்பத்தி வளர்ச்சி 12 சதவீதத்திலிருந்து, 2.1 சதவீதமாகவும், மின்சார உற்பத்தி துறையின் வளர்ச்சி 6.9 சதவீதத்திலிருந்து, 6.4 சதவீதமாகவும் குறைந்துள்ளது.மேலும், பொறியியல் துறையின் உற்பத்தி வளர்ச்சியும், இதே மாதங்களில், 64.1 சதவீதத்திலிருந்து, 2.5 சதவீதமாக சரிவடைந்துள்ளது. ஒட்டுமொத்த நுகர்பொருள்கள் துறையின் வளர்ச்சியும் 11.9 சதவீதத்திலிருந்து, 5.9 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது.இவற்றையெல்லாம் வைத்து பார்க்கையில், நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி, மதிப்பீட்டை விட மிகவும் குறைவாக@வ இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.öŒன்ற ஏப்ரல் மாதத்தில், தயாரிப்பு துறையின் வளர்ச்சி 6.9 சதவீதமாகவும், சுரங்கம் மற்றும் மின்சாரத்துறையின் வளர்ச்சி முறையே 2.2 சதவீதம், 4.6 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது.பொறியியல் சாதனங்கள்தயாரிப்பு துறையின் வளர்ச்சி 14.5 சதவீதம் என்ற அளவிலும், நுகர் பொருள்கள் துறையின்வளர்ச்சி 2.9 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது.புதிய தொழில்துறை குறியீட்டு எண் கணக்கிடுவதற்கு, புதிதாக 100 வகையான பொருள்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் கீழ், ஐஸ்கிரீம், பழச்சாறு வகைகள், மொபைல் போன்கள், கம்ப்யூட்டர் சாதனங்கள், செய்தித்தாள், ரசாயன பிரிவின் கீழ் அமோனியா, அமோனியா சல்பேட், மின்சார சாதனங்கள் பிரிவின் கீழ் சூரிய எரிசக்தி சாதனங்கள், நவரத்தினங்கள், ஆபரணங்கள் மற்றும் பாகுக்கழிவு உள்ளிட்ட பல்வேறு புதிய இனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய தொழில்துறை குறியீட்டு எண்ணை, மத்திய அரசின் தொழில் மேம்பாடு மற்றும் கொள்கை துறையும், மத்திய புள்ளியியல் அமைப்பும் இணைந்து உருவாக்கியுள்ளன.இந்த புதிய தொழில்துறை குறியீட்டு எண் வாயிலாக, நாட்டின் பல்வேறு தொழில்துறைகளின் வளர்ச்சி மற்றும் பின்னடைவை துல்லியமாக கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய தொழில்துறை குறியீட்டு எண் மதிப்பீட்டிற்கு, மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், 'சென்ற ஏப்ரல் மாதத்தில், தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி சரிவடைந்திருப்பது கவலை அளிக்கிறது. இருப்பினும், ஒரு மாத தொழில் வளர்ச்சியின் அடிப்படையில் எந்த முடிவிற்கும் வர முடியாது. இனி வரும் மாதங்களில் இதன் வளர்ச்சி எப்படி உள்ளது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி குறைந்துள்ளதற்கு, தயாரிப்பு துறை மற்றும் சுரங்கத்துறையின் ”ணக்க நிலைதான் முக்கியகாரணம்' என்று தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|