பதிவு செய்த நாள்
14 ஜூன்2011
03:54
சென்னை : வார்ட்சிலா இந்தியா நிறுவனம், மின் திட்டங்களுக்குத் தேவையான பல்வேறு இயந்திரங்கள் தயாரிப்பிலும், அது தொடர்பான சேவைகளை வழங்குவதிலும் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், மின்சார வினியோகத்தில் ஏற்படும் மின் இழப்பைத் தடுக்கவும், சிக்கனமாக மின் உற்பத்தி மேற்கொள்ளவும், நாள் முழுவதும் தடையில்லா மின்சாரத்தை பெறவும் பல்வேறு தீர்வுகளை கொண்ட 'ஸ்மார்ட் பவர் ஜெனரேஷன்' என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. இது குறித்து சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில், வார்ட்சிலா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் சரின் பேசியதாவது: மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் கிடைக்க வகை செய்ய வேண்டியது அரசின் கடமையாகும். மின் உற்பத்தி செலவை குறைத்தால் இது சாத்தியமாகும். இதை செயல்படுத்தும் விதத்தில் 'ஸ்மார்ட் பவர் ஜெனரேஷன்' என்ற மின் தீர்வு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தினால், நிலக்கரியின் தேவை மற்றும் அளிப்பிற்கு இடையிலான இடைவெளியை குறைத்து, 6.9 சதவீதம் சேமிக்கலாம். நிலக்கரி பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதன் மூலம் 4,500 கோடி ரூபாயை மிச்சப்படுத்தலாம். இது போல் இதர எரிசக்தி உற்பத்தி, வினியோகம் சார்ந்த பிரச்னைகளுக்கும் தீர்வு காணலாம். இவ்வாறு ராகேஷ் சரின் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|