பதிவு செய்த நாள்
18 ஜூன்2011
10:55
கொச்சி: ஈமு கோழி வளர்ப்பில் நாடு முழுவதுமாக ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சீரான முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கும் இந்த தொழில் அண்மைக் காலம் வரை தமிழகம், ஆந்திரா ஆகிய தென்மாநிலங்களிலும், மகாராஷ்டிராவிலும் தான் பிரபலமாக இருந்தது. இப்போது இது வடமாநிலங்களிலும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது. பஞ்சாப், குஜராத், அரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஈமு கோழிப் பண்ணைகள் உருவாகத் தொடங்கியுள்ளன. ஈமு கோழியின் உடல் பாகங்கள் அனைத்தும் முழுமையாக வர்த்தக மதிப்பு கொண்டவையாக உள்ளன. இறைச்சி, முட்டை, எண்ணெய், தோல், எலும்பு அனைத்துமே தனித்தனி பயனைக் கொண்டுள்ளன. இதனாலும், முட்டைகளுக்கும், குஞ்சுகளுக்கும் நல்ல விலை கிடைப்பதாலும் ஏராளமானோர் இத்தொழிலில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். ஈமு கோழி வளர்ப்புத் துறையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கோல்டன் ஈமு ஃபார்ம்ஸ் என்ற நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. நாடு முழுவதுமாக இந்நிறுவனம் 2,000-த்துக்கு மேற்பட்ட ஈமு பண்ணைகளைக் கொண்டுள்ளது. இந்தப் பண்ணைகளில் சுமார் 5 லட்சம் ஈமு கோழிகள் வளர்க்கப்படுகின்றன. வழக்கமான இறைச்சி, முட்டை விற்பனையுடன் தற்போது இந்நிறுவனம் சோதனை அடிப்படையில் பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் எண்ணெயையும் விற்பனை செய்ய தொடங்கியுள்ளது. ஈமு கோழியிலிருந்து கிடைக்கும் எண்ணெய் பல்வேறு அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. குஜராத் மாநிலத்திலிருந்து அதிக அளவு எண்ணெய் வாங்கப்படுகிறது என இந்நிறுவனத்தின் இயக்குனர் முசாஃபர் அலி தெரிவித்தார். அடுத்த சில ஆண்டுகளில் வளர்க்கும் கோழிகளின் எண்ணிக்கையை பன்மடங்கு அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|