கரடியின் பிடியில் பங்குச்சந்தை 'சென்செக்ஸ்' மேலும் 115 புள்ளிகள் சரிவுகரடியின் பிடியில் பங்குச்சந்தை 'சென்செக்ஸ்' மேலும் 115 புள்ளிகள் சரிவு ... ஐடியா செல்லுலார் லாபம் ரூ.274 கோடி ஐடியா செல்லுலார் லாபம் ரூ.274 கோடி ...
சீரான முன்னேற்றப் பாதையில் ஈமு கோழி வளர்ப்புத் தொழில்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2011
10:55

கொச்சி: ஈமு கோழி வளர்ப்பில் நாடு முழுவதுமாக ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சீரான முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கும் இந்த தொழில் அண்மைக் காலம் வரை தமிழகம், ஆந்திரா ஆகிய தென்மாநிலங்களிலும், மகாராஷ்டிராவிலும் தான் பிரபலமாக இருந்தது. இப்போது இது வடமாநிலங்களிலும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது. பஞ்சாப், குஜராத், அரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஈமு கோழிப் பண்ணைகள் உருவாகத் தொடங்கியுள்ளன. ஈமு கோழியின் உடல் பாகங்கள் அனைத்தும் முழுமையாக வர்த்தக மதிப்பு கொண்டவையாக உள்ளன. இறைச்சி, முட்டை, எண்ணெய், தோல், எலும்பு அனைத்துமே தனித்தனி பயனைக் கொண்டுள்ளன. இதனாலும், முட்டைகளுக்கும், குஞ்சுகளுக்கும் நல்ல விலை கிடைப்பதாலும் ஏராளமானோர் இத்தொழிலில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். ஈமு கோழி வளர்ப்புத் துறையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கோல்டன் ஈமு ஃபார்ம்ஸ் என்ற நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. நாடு முழுவதுமாக இந்நிறுவனம் 2,000-த்துக்கு மேற்பட்ட ஈமு பண்ணைகளைக் கொண்டுள்ளது. இந்தப் பண்ணைகளில் சுமார் 5 லட்சம் ஈமு கோழிகள் வளர்க்கப்படுகின்றன. வழக்கமான இறைச்சி, முட்டை விற்பனையுடன் தற்போது இந்நிறுவனம் சோதனை அடிப்படையில் பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் எண்ணெயையும் விற்பனை செய்ய தொடங்கியுள்ளது. ஈமு கோழியிலிருந்து கிடைக்கும் எண்ணெய் பல்வேறு அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. குஜராத் மாநிலத்திலிருந்து அதிக அளவு எண்ணெய் வாங்கப்படுகிறது என இந்நிறுவனத்தின் இயக்குனர் முசாஃபர் அலி தெரிவித்தார். அடுத்த சில ஆண்டுகளில் வளர்க்கும் கோழிகளின் எண்ணிக்கையை பன்மடங்கு அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)