பதிவு செய்த நாள்
21 ஜூன்2011
01:11
சென்னை:சென்னை அருகே, அம்பத்தூர், திருமழிசை,திருமுடிவாக்கம் பகுதிகளில் செயல்பட்டு வரும் தொழில்பேட்டைகளின், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, 13.61 கோடி ரூபாய் நிதியுதவி தேவை என, தமிழக அரசுக்கு சி.ஏ.ஏ.ஐ.ஐ.யு.சி கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து இவ்வமைப்பின் தலைவர் திலீப் கும்பத் கூறியதாவது ;மூன்று தொழில்பேட்டைகளிலும், கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேம்பாட்டு பணிகள் தொடங்கிய போது, திட்ட மதிப்பு 47.49 கோடி ரூபாயாக இருந்தது. கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வால், தற்போது இந்த மதிப்பீடு 61.10 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த தொழிற்பேட்டைகளில் 85 -95 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. புதிய கழிவு நீர் சுத்திகரிப்பு துணை நிலையங்கள், பொது கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பு, ஒளி விளக்குகள், சாலை விரிவாக்கம், திறன் வளர்ப்பு மையம் உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட வேண்டும். எனவே, நிலுவையில் உள்ள வளர்சிப் பணிகளை முடிக்க, மாநில அரசு 13 கோடியே 61 லட்ச ரூபாய் வழங்க வேண்டும். இவ்வாறு திலீப் கும்பத் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|