இந்திய பங்குச் சந்தைகளில் சரிவு நிலை:அன்னிய நிதி நிறுவனங்கள் கடன் பத்திரங்களில் ரூ.15,000 கோடி முதலீடுஇந்திய பங்குச் சந்தைகளில் சரிவு நிலை:அன்னிய நிதி நிறுவனங்கள் கடன் ... ... 'தொழில் கட்டமைப்பு வசதிக்கு ரூ.14 கோடி நிதியுதவி தேவை' 'தொழில் கட்டமைப்பு வசதிக்கு ரூ.14 கோடி நிதியுதவி தேவை' ...
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால்வட்டி விகிதங்களை உயர்த்த வங்கிகள் திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2011
01:10

மும்பை:நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், ரிசர்வ் வங்கி, சென்ற வியாழக்கிழமையன்று வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியது.இதையடுத்து, பல முன்னணி வங்கிகள் வழங்கப்படும் கடன்கள் மற்றும் திரட்டப்படும் டிபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளன. கனரா பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், கார்ப்பரேஷன் பேங்க் உள்ளிட்ட பல வசங்கிகள் வழங்கப்படும் கடன்கள் மற்றும் திரட்டப்படும் டிபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை,மேலும் உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளன.இது குறித்து, கனரா வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எஸ். ராமன் கூறுகையில் 'வங்கியின் சொத்து மற்றும் கடன் நிர்வாகக் குழு கூட்டத்தில், இது குறித்து முடிவு எடுக்கப்படும்.குறிப்பாக ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வால், எங்கள் வங்கி, அடிப்படை வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்பாக வங்கி, அடிப்படை வட்டி விகிதம் மற்றும் முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் உயர்த்தியது. இதையடுத்து, அடிப்படை வட்டி விகிதம், 13.75 சதவீதத்திலிருந்து, 14.25 சதவீதமாகவும், முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதம் 9.50 சதவீதத்திலிருந்து, 10 சதவீதமாக உயர்த்தப்பட்டது' என்று தெரிவித்தார்.கார்ப்பரேஷன் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராம்நாத் பிரதீப் கூறுகையில் 'வங்கி, வழங் கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்த திட்டமிட்டுள்ளது. அவ்வாறு, உயர்த்தாவிடில், வங்கியின் நிகர வட்டி வருவாய் வரம்பு பாதிப்புக்குள்ளாகும்.எனினும், வங்கி,திரட்டும் டிபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும் எண்ணமில்லை' என்றார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தும் என தெரிகிறது. இவ்வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எம். நரேந்திரா கூறுகையில், 'வங்கி, சொத்து மற்றும் கடன் நிர்வாகக் குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப, டிபாசிட் மற்றும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும். குறைந்த கால அடிப்படையிலான டிபாசிட்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்படலாம்' என்று தெரிவித்தார். பொதுத்துறையைச் சேர்ந்த ஐ.டீ.பீ.ஐ வங்கியின், சொத்து மற்றும் கடன் நிர்வாக குழுவின் கூட்டம் சென்ற சனிக்கிழமையன்று நடைபெற்றது. இதில், டிபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் உயர்த்தும் வகையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி உயர்வு, இம்மாதம் 21ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதேசமயம், தேனா பேங்க், யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் பேங்க் மற்றும் ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் போன்ற வங்கிகள், தற்போதைய நிலையில் வட்டி விகிதங்களை உயர்த்தாது என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)