பதிவு செய்த நாள்
22 ஜூன்2011
23:59
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம் புதன்கிழமையன்று பெரிய அளவில் மாற்றம் ஏதுமின்றி காணப்பட்டது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும், எதிரொலித்தது.புதன்கிழமையன்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், மோட்டார் வாகனம், மின்சாரம், மருந்து, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்திருந்தது. அதே சமயம், ரியல் எஸ்டேட், நுகர்பொருள்கள், தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், உலோகம் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் வர்த்தகம் முடியும் போது, 9.67 புள்ளிகள் குறைந்து, 17,550.63 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தினிடையே அதிகபட்சமாக, 17,678.86 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,492.19 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 14 நிறுவன பங்குகளின் விலை அதிகரித்தும், 16 நிறுவன பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 2.45 புள்ளிகள் உயர்ந்து, 5,278.30 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,310.50 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,262.50 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|