பதிவு செய்த நாள்
28 ஜூன்2011
10:47
ஆமதாபாத் : மேற்காசிய நாடுகளில், ஸ்டீல் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக துபாயில் சர்வீஸ் சென்டரை அமைக்க உள்ளதாக எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, எஸ்ஸார் ஸ்டீல் லிமிடெட் நிறுவனத்தின் புராசசிங் மற்றும் டிஸ்டிரிபியூசன் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, துபாயில் சர்வீஸ் சென்டர் அமைக்கப்படுவதன் மூலம், சர்வதேச அளவிலான வர்த்தகத்தை விரிவடைகிறது. துபாயில் அமைக்கப்பட உள்ள சர்வீஸ் சென்டரின் மூலம், மேற்காசியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளில் ஸ்டீல் தேவை பூர்த்தி செய்யப்பட வழிவகை ஏற்பட்டுள்ளது. துபாயில் அமைக்கப்பட உள்ள சர்வீஸ் சென்டர், எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தின் மூன்றாவது சர்வதேச யூனிட் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக, பிரிட்டன் மற்றும் இந்தோனேஷியாவில் யூனிட்கள் செயல்பட்டு வருவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|