19 ஆயிரம் புள்ளிகளை கடந்து ஏற்றத்துடன் முடிந்தது பங்குச்சந்தை19 ஆயிரம் புள்ளிகளை கடந்து ஏற்றத்துடன் முடிந்தது பங்குச்சந்தை ... மார்க் குழுமம் சிறந்த நிறுவனமாக தேர்வு மார்க் குழுமம் சிறந்த நிறுவனமாக தேர்வு ...
பங்குச் சந்தை பட்டியலில் பிர்லா பசிபிக், ருஷில் டெக்கார் நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2011
01:45

மும்பை : அண்மையில், பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு, மூலதனச் சந்தையில் களமிறங்கிய, பிர்லா பசிபிக் மெட்ஸ்பா மற்றும் ருஷில் டெக்கார் ஆகிய இரண்டு நிறுவனங்களின் பங்குகள், வியாழனன்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன. இவற்றுள், பிர்லா பசிபிக் மெட்ஸ்பா நிறுவனம், 10 ரூபாய் முகமதிப்பிலேயே பங்குகளை வெளியிட்டு 65 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டது. இந்நிறுவனத்தின் பங்குகள் வேண்டி, ஒட்டு மொத்த அளவில், 1.18 மடங்குகளுக்கு விண்ணப்பங்கள் வந்தன. இந்நிறுவனம், ஆரோக்கிய பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக, 'இவால்வ்' என்ற பெயரில், டில்லி, பெங்களூரு, ஆமதாபாத், புனே, சென்னை, ஐதராபாத் போன்ற நகரங்களில், 55 மையங்களைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, 49 கோடி ரூபாயும், நடைமுறை மூலதனம், விளம்பர செலவினம் உள்ளிட்டவைகளுக்காக, 6 கோடி ரூபாயும் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. பிர்லா பசிபிக் மெட்ஸ்பா நிறுவனத்தின் பங்குகள், மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட போது, 10.10 ரூபாய்க்கு விலை போனது. வர்த்தகத்தினிடையே அதிகபட்சமாக, 30.70 ரூபாய் வரையிலும், குறைந்தபட்சமாக 10.10 ரூபாய்க்கும் கைமாறியது. பின்பு வர்த்தகம் முடியும் போது 25.35 ரூபாயில் நிலை பெற்றது. ருஷில் டெக்கார்நிறுவனம்: 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றை, 72 ரூபாய் என்ற விலையில் வெளியிட்டு, மூலதனச் சந்தையில் இருந்து, 73 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டது. இந்நிறுவனம், வீடுகள் மற்றும் அலுவலகங்களில், உள் அலங்கார வேலைப்பாடுகளுக்கான, லேமினேடட் ஷீட்டுகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக, இந்நிறுவனத்திற்கு, குஜராத் மாநிலத்தில், மூன்று இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன. இந்நிறுவனம், மாற்றுத் தொழில் நடவடிக்கையாக நடுத்தர கனம் கொண்ட பைபர் அட்டைகள் தயாரிப்பதற்காக, கர்நாடக மாநிலத்தில், தொழிற்சாலை ஒன்றை அமைத்து வருகிறது. இத்தொழிற்சாலை இவ்வாண்டு, நவம்பர் மாதம் முதல் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் பங்குகளும், வியாழன்று மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன. தொடக்கத்தில், வெளியீட்டு விலையை விட அதிகமாக, 81.25 ரூபாய்க்கு கைமாறியது. வர்த்தகத்தினிடையே, அதிகபட்சமாக 124.05 ரூபாய் வரையிலும், குறைந்தபட்சமாக 75 ரூபாய் வரையிலும் சென்ற பங்கின் விலை, வர்த்தகம் முடியும் போது, 119.65 ரூபாயில் முடிந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)