பதிவு செய்த நாள்
08 ஜூலை2011
13:52
புதுடில்லி : மேற்கத்திய நாடுகளின் சந்தைகளில் தேவை அதிகரித்து வருவதால் ஜூன் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி விகிதம் 46.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் 29.2 பில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதே போன்று இறக்குமதி விகிதமும் 42.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜூன் மாதத்தில் 36.9 பில்லியன் டாலர் அளவிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து தரப்பிலும் வர்த்தகம் வளர்ச்சி அடைந்து வருவதையே இது காட்டுவதாக பொருளாதார செயலாளர் ராகுல் குல்லர் தெரிவித்துள்ளார். 2011-12ம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் நாட்டின் ஏற்றுமதி 45.7 சதவீதமாகவும், இறக்குமதி 36.2 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 31.6 பில்லியன் டாலர் அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|