பதிவு செய்த நாள்
08 ஜூலை2011
16:35
கொச்சி : கேரளாவில் 40 ஆயிரம் வாடிக்கையாளர்களை பெற பி.எஸ்.என்.எல்., நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் கேரள மாநிலத்தின் வர்த்தக தலைநகரான கொச்சியில் மட்டும் 16 ஆயிரம் வாடிக்கையாளர்களை பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக பி.எஸ்.என்.எல்., நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதே போன்று திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோட்டில் அதிகளவில் வாடிக்கையாளர்களை பெறவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொச்சியில் 100 இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாக எர்ணாகுளம் தலைமை பொது மேலாளர் பி.டி.மேதிவ் தெரிவித்துள்ளார். இந்த புதிய இணைப்புக்கள் வழக்கமாக உள்ள 2 எம்.பி.பி.எஸ்., அளவில் இல்லாது 100 எம்.பி.பி.எஸ்., அளவில் இருக்கும் எனவும், அதே சமயம் இன்டர்நெட் டெலிபோனி மற்றும் வீடியோ கான்பிரசிங் உள்ளிட்ட வசதிகளையும் கொண்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|