பதிவு செய்த நாள்
09 ஜூலை2011
00:22
புதுடில்லி: மேற்கத்திய நாடுகளின் தேவை அதிகரிப்பால், சென்ற ஜூன் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி 46.4 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2,920 கோடி டாலராக(1 லட்சத்து 34 ஆயிரத்து 320 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.இ@த மாதத்தில்,இறக்குமதியும், 42.4 சதவீதம் அதிகரித்து, 3,690 கோடி டாலராக (1 லட்சத்து 69 ஆயிரத்து 740 கோடி ரூபாய்) உயர்ந் துள்ளது. ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகரித் துள்ளதால் நாட்டின்வர்த்தக பற்றாக்குறை 770 கோடி டாலராக (35 ஆயிரத்து 420 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.சென்ற ஜூன் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி மிக அதிகளவு வளர்ச்சி கண்டுள்ளது. இது, அனைத்து தொழில் துறைகளின் வளர்ச்சியும் மேம்பட்டு வருவதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என,மத்திய வர்த்தக துறை செயலர் ராகுல் குல்லார் தெரிவித்தார்.நடப்பு 2011-12ம் நிதியாண்டின், ஏப்ரல்- ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தில், நாட்டின்ஏற்றுமதி 45.7 சதவீதம் அதிகரித்து 7,900 கோடி டாலராக (3 லட்சத்து63 ஆயிரத்து 400 கோடி ரூபாய்) வளர்ச்சி கண்டுள்ளது. இதே காலத்தில், நாட்டின் இறக்குமதி, 36.2 சதவீதம் உயர்ந்து, 11 ஆயிரத்து 60 கோடி டாலராக (5 லட்Œத்து 8ஆயிரத்து 760 @காடி ரூபா#)அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல்காலாண்டில், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 3,160 கோடி டாலராக (1 லட்சத்து 45 ஆயிரத்து 360 கோடி ரூபாய்) உள்ளது என குல்லார் மேலும் தெரிவித்தார்.நாட்டின் ஒட்டு மொத்த ஏற்றுமதியில், பொறியியல், பெட்ரோலியப் பொருள்கள், @தால் பொருள்கள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், ஆயத்த ஆடைகள் மற்றும் மின்னணுசாதனங்கள் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|