பதிவு செய்த நாள்
18 ஜூலை2011
02:38
புதுடில்லி:நடப்பு 2010-11ம் ஆண்டு சர்க்கரைபருவத்தில் இது வரையிலுமாக, நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.45 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. கரும்பு பயிரிடும் முக்கிய பகுதிகளில் விளைச்சல் அதிகமானதை தொடர்ந்து சர்க்கரை உற்பத்தி அதிகரித்துள்ளது.நடப்பு ஜூலை மாதம் 13ம் தேதி வரையில், 2.45 கோடி டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என சர்க்கரை ஆலைகள் தெரிவித்துள்ளன. வரும் காலத்தில், சர்க்கரை உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, மத்திய உணவுத் துறை அமைச்சர் கே.வி. தாமஸ் தெரிவித்தார்.நாட்டின் சர்க்கரை உற்பத்தி, நடப்பு சர்க்கரை பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்), 2.42 கோடி டன்னாக இருக்கும் என, முன்பு மதிப்பீடு செய்யப் பட்டிருந்தது. இந்நிலையில், முன் கூட்டியே, சர்க்கரை உற்பத்தி, அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில், சர்க்கரை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடம் வகிக்கிறது. மேலும், சர்க்கரை பயன்பாட்டில் முதலிடத் தில் உள்ளது. சர்க்கரைக்கான தேவை, இரண்டாண்டு கால இடைவெளியில், 2.10 - 2.15 கோடி டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, கடந்த வருடம் 1.90 கோடி டன்னாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|