பதிவு செய்த நாள்
19 ஜூலை2011
02:34
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமையன்று அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. அமெரிக்காவின் கடன் சுமை மிகவும் அதிகரித்து வருகிறது என்ற செய்தியால், அந்நாட்டிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பங்கு வர்த்தகம் மிகவும் மந்தமாக இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது.திங்கள்கிழமையன்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், தகவல் தொழில்நுட்பம் மோட்டார் வாகனம், மருந்து, தொலைதொடர்பு போன்ற துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், ரியல் எஸ்டேட், நுகர்வோர் சாதனங்கள், உலோகம் மற்றும் மின்சாரம் போன்ற துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 54.88 புள்ளிகள் சரிவடைந்து, 18,507.04 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தினிடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 18,622.56 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,469.53 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 19 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், 11 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 14.05 புள்ளிகள் குறைந்து, 5,567.05 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,596.60 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,550.95 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|