பதிவு செய்த நாள்
19 ஜூலை2011
02:34
சண்டிகர்:நடப்பு நிதியாண்டில், நம் நாட்டின் பாசுமதி அரிசி ஏற்றுமதி 30 சதவீதம் அதிகரிக்கும் என, மதிப்பிடப் பட்டுள் ளது.' ஈராக் நாட்டில், இந்தியாவின் பாசுமதி அரிசிக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, நடப்பு நிதியாண்டில் இதன் ஏற்றுமதி 3 லட்சம் டன்னாக உயரும் என, அகில இந்திய அரிசி ஏற்றுமதி கூட்டமைப்பின் தலைவர் விஜய் சேத்தியா தெரிவித்தார்.கடந்தாண்டில், 22 லட்சம் டன் அளவிற்கு பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப் பட்டுள்ளது. இதில், 80 சதவீதம் சவூதி அரேபியா, ஈரான், குவைத், ஏமன் ஆகிய வளைகுடா நாடுகளுக்கு ஏற்று மதி ஆகியுள்ளது. ஈராக் நாடு, ஆண்டு தோறும், 15 லட்சம் டன் உயர்தர அரிசி வகைகளை இறக்குமதி செய்து கொள்கிறது. இந்தியாவிலிருந்து, ஈராக் நாட்டிற்கு இதுவரை ஒரு லட்சம் டன்னிற்கும் அதிகமாக பாசுமதி அரிசி ஏற்றுமதியாகியுள் ளது. இதில், பெரும்பான்மை பங்கு, 'புசா 1121' வகை பாசுமதி அரிசியாகும். நடப்பாண்டில், ஈராக்கிற்கு மேலும் 70 ஆயிரம் டன் பாசுமதி அரிசி ஏற்றுமதியாகும் என்று எதிர்பார்ப்பதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர். நாட்டின் பாசு மதி அரிசி உற்பத்தியில், பஞ்சாப் மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களின் பங்களிப்பு 75சதவீத அளவிற்கு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|