பதிவு செய்த நாள்
21 ஜூலை2011
00:08
சென்னை: பியூச்சர் ஜெனரலி இந்தியா இன்‹ரன்ஸ் நிறுவனம், 'பியூச்சர் எக்ஸ்பிரஸ்' மற்றும் 'பியூச்சர் எக்ஸ்பிரஸ் பிளஸ்' என்ற, இரு வகையான வாகனப் காப்பீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டங்கள் குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கே.ஜி.கிருஷ்ணமூர்த்தி ராவ் செய்தியாளர்களிடம் பேசியதாவது: 'பியூச்சர் எக்ஸ்பிரஸ்' திட்டத்தின் கீழ், வாகன விபத்து குறித்து, காப்பீட்டுதாரர் தரும் தகவலின் பேரில், அருகிலுள்ள பணிமனை குறித்து விவரம் தெரிவிக்கப்படும். அங்கு, நிறுவனத்தின் ஆய்வாளர் ஆவணங்களை பரிசீலித்து, இழப்பீடு குறித்து மதிப்பிட்டு, செலவை தெரிவிப்பார். முன்னுரிமை அடிப்படையில், வாகனம் பழுது பார்க்கப்படும். செலவுத் தொகையினை, காப்பீட்டுதாரரிடமிருந்து, பணிமனை பெற்றுக் கொள்ளும். வாகனம் டெலிவரியின் போது, இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். 'பியூச்சர் எக்ஸ்பிரஸ் பிளஸ்' திட்டத்தில், இழப்பீடு தொடர்பாக ஆய்வாளர் தெரிவிக்கும் மதிப்பீட்டு தொகை, உடனடியாக காப்பீட்டுதாரரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அவர் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்ட பணிமனை தவிர, தமக்கு விருப்பமான பணிமனையிலும் பழுதை சரி செய்து கொள்ளலாம். இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி ராவ் தெரிவித்தார்.நிறுவனத்தின் தலைமை அதிகாரி (இழப்பீடு கோரிக்கை பிரிவு) குருதத் ஜோக்லெகர், 'நடப்பு 2011 - 12ம் நிதியாண்டில், நிறுவனத்தின் பிரிமிய வருவாய் 270 கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும் என, எதிர்பார்க்கிறோம்' என்று தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|