பியூச்சர் ஜெனரலி இந்தியா வாகன காப்பீட்டு திட்டங்கள் அறிமுகம்பியூச்சர் ஜெனரலி இந்தியா வாகன காப்பீட்டு திட்டங்கள் அறிமுகம் ... ரப்பர் உற்பத்தி 5.4 சதவீதம் வளர்ச்சி ரப்பர் உற்பத்தி 5.4 சதவீதம் வளர்ச்சி ...
கடந்த நான்கு ஆண்டுகளில் மருந்து நிறுவன பங்குகளின் முதலீட்டில் அதிக வருவாய்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2011
00:09

சென்னை: கடந்த 2007ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி முதல் நடப்பாண்டு ஜூன் மாதம் இறுதி வரை, மருந்து, வங்கி மற்றும் நுகர் பொருள் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்@தாருக்கு, அதிக அளவில் வருவாய் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.கடந்த 2007ம் ஆண்டு அக்@டாபர் 15ம் @ததி முதல், சென்ற ஜூன் மாதம் 30ம் @ததி வரையிலான காலத்தில், பீ.எஸ்.ஈ-500 குறியீட்டு எண்ணில் இடம் பெற்றுள்ள வங்கி, மருந்து, நுகர்@வார் பொருள் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் செயல்பாடு குறித்து ஆய்வு @மற்கொள்ளப்பட்டது. இதில் 10 சதவீதம், அதாவது 55 நிறுவனப் பங்குகளில் @மற்கொள்ளப்பட்ட முதலீட்டின் மீதான வருவாய் 100 சதவீதத்திற்கும் @மலாக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. 20 சதவீதம், அதாவது 99 நிறுவனப்பங்குகள், 50 சதவீதத்திற்கும் அதிகமான வருவாயை முதலீட்டாளர்களுக்கு பெற்றுத் தந்துள்ளன. 158 நிறுவனங்களின் பங்குகள், 10 சதவீதத்திற்கும் @மலாக வருவாயை அளித்துள்ளன.மதிப்பீட்டு காலத்தில், 'சென்செக்ஸ்' குறியீட்டு எண், சராசரியாக 18,600 புள்ளிகள் என்ற அளவி@ல@ய இருந்துள்ளது. அதிக வருவாய் அளித்ததில், பிரானீத்தா இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்நிறுவனப் பங்கின் விலை, 3,000 சதவீதம் உயர்ந்து, 2.34 ரூபாயில் இருந்து 72.85 ரூபாயாக உயர்ந்துள்ளது.இரண்டாவது இடத்தை டி.டி.@க பிரஸ்டீஜ் நிறுவனம் பிடித்துள்ளது. இந்நிறுவனப் பங்கின் விலை,2,000 சதவீதம் அதிகரித்து, 140.15 ரூபாயில் இருந்து 2,942.05 ரூபாயாக உயர்ந்துள்ளது. மூன்றாவது இடத்தை பிடித்துள்ள ஸ்ரீ கு@ளாபல் டி@ரட்பின் நிறுவனப் பங்கின் விலை 1,339 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிறுவனம், பீ.எஸ்.ஈ 500 குறியீட்டு எண் பட்டியலில் கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் தான் @சர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இதர துறைகளைப் பொறுத்தவரை, ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலத்தில், @க.ஜி.என் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கின் விலை, 5,457 சதவீதம் அதிகரித்து, முதலீட்டாளர்களுக்கு மிகச் சிறந்த வருவாயை வாரி வழங்கியுள்ளது. அது @பான்று, குவாலிட்டி டெய்ரி நிறுவனப் பங்கின் விலையும், 3,950 சதவீதம் உயர்ந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.மணப்புரம் ஜெனரல் நிறுவனப் பங்கின் விலை, 1,171 சதவீதம் உயர்ந்துள்ளது. ஸைடஸ் வெல்னெஸ் நிறுவனப் பங்கின் விலை, 666 சதவீதம் அதிகரித்துள்ளது. @காரமண்டல் நிறுவனத்தின் பங்கின் விலை 610 சதவீதமும், விர்ல்பூல் நிறுவனப் பங்கின் விலை 492 சதவீதமும் உயர்ந்துள்ளன. வி.ஐ.பி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கின் விலை 453 சதவீத உயர்வைக் கண்டுள்ளன.மதிப்பீட்டு காலத்தில் நுகர்பொருள்கள் மற்றும் மருந்து நிறுவனங்களின் பங்குகள் தான் அதிக அளவில் முதலீட்டாளர்களுக்கு வருவாயை ஈட்டித் தந்துள்ளன. முதலீட்டின் மீது 50 சதவீதத்திற்கும் அதிகமாக வருவாய் ஈட்டித் தந்த 99 நிறுவனப் பங்குகளில், நுகர்பொருள், மருந்து,பொறியியல் பொருள்கள் மற்றும் வங்கித் துறையை @சர்ந்த நிறுவனங்களின் எண்ணிக்கை 56 ஆக உள்ளது. இந்த பட்டியலில், நுகர்பொருள் துறை, 19 நிறுவனங்களுடன் முதலிடத்தில் உள்ளது.இது, நாடு மிகப் பெரிய பொருளாதார மந்த நிலையை சந்தித்த நிலையிலும், இத்துறைகள் எவ்வித பாதிப்புமின்றி, வளர்ச்சி கண்டு வருவதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது என, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்றாண்டுகளில், இந்தியப் பொருளாதார வளர்ச்சி 9-10 சதவீதத்தில் இருந்து 7-8 ஆக குறைந்துள்ள நிலையிலும், சர்வ@தச நாடுகளை விட, அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்கக் கூடியதாக விளங்குகிறது. இ@த காலத்தில், அமெரிக்க பொருளாதார வளர்ச்சி 3 சதவீதத்தில் இருந்து 1.2 சதவீதமாக சரிவடைந்துள்ளது. ஐ@ராப்பிய நாடுகள், இன்னும் சரிவில் இருந்து மீள முடியாமல் திணறி வருகின்றன.இந்தியாவை பொறுத்தவரை, மருந்து மற்றும் நுகர் பொருள் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள், நீண்ட கால, நிலையான வளர்ச்சியை கொண்டவை. வாகனம், சிமென்ட், ரியல்எஸ்@டட் உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சி என்பது, ”ழற்சி அடிப்படையில்தான் இருக்கும் என, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)