கடந்த நான்கு ஆண்டுகளில் மருந்து நிறுவன பங்குகளின் முதலீட்டில் அதிக வருவாய்கடந்த நான்கு ஆண்டுகளில் மருந்து நிறுவன பங்குகளின் முதலீட்டில் அதிக ... ... பருப்பு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெறும் பருப்பு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெறும் ...
ரப்பர் உற்பத்தி 5.4 சதவீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2011
00:09

கொச்சி: நடப்பு 2011-12ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தில், உள்நாட்டில் இயற்கை ரப்பர் உற்பத்தி 5.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. அதேசமயம், இக்காலாண்டில், இயற்கை ரப்பர் பயன்பாடு, 3.9 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது என, இந்திய ரப்பர் வாரியத்தின் தற்காலிக புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கணக்கீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலாண்டுகளில், இயற்கை ரப்பர் உற்பத்தி, 1 லட்சத்து 66 ஆயிரத்து 750 டன்னிலிருந்து, 1 லட்சத்து 75 ஆயிரத்து 700 டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது. இதே காலாண்டுகளில், ரப்பர் பயன்பாடு, 2 லட்சத்து 32 ஆயிரத்து 850 டன்னிலிருந்து, 2 லட்சத்து 42 ஆயிரம் டன்னாக உயர்ந்துள்ளது. இதே காலாண்டுகளில், ரப்பர் ஏற்றுமதி, இரண்டு மடங்கு அதிகரித்து, அதாவது, 4 ஆயிரத்து 323 டன்னிலிருந்து, 8 ஆயிரத்து 189 டன்னாக அதிகரித்துள்ளது. ரப்பர் இறக்குமதி, 38 ஆயிரத்து 233 டன்னிலிருந்து, 41 ஆயிரத்து 929 டன்னாக உயர்ந்துள்ளது.2011ம் ஆண்டு ஜூன் மாத இறுதி நிலவரப்படி, கையிருப்பில் உள்ள ரப்பர், 2 லட்சத்து 47 ஆயிரத்து 442 டன்னாக உள்ளது. இது,கடந்த 2010ம் ஆண்டின், இதே காலத்தில், 1 லட்சத்து 80 ஆயிரத்து 697 டன்னாக இருந்தது.சென்ற ஜூன் மாதத்தில் மட்டும், உள்நாட்டின் இயற்கை ரப்பர் உற்பத்தி, 4.1 சதவீதம் அதிகரித்து, 59 ஆயிரத்து 200 டன்னாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 56 ஆயிரத்து 850 டன்னாக இருந்தது. ஜூன் மாதத்தில்,ரப்பர் பயன்பாடு, 0.6 சதவீதம் உயர்ந்து, அதாவது, 80 ஆயிரம் டன்னிலிருந்து, 80 ஆயிரத்து 500 டன்னாக உயர்ந்துள்ளது என ரப்பர் வாரியம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)