பதிவு செய்த நாள்
23 ஜூலை2011
01:29
சென்னை:பெங்களூரில் பதிவு அலுவலகத்தை கொண்டு செயல்பட்டு வரும், பொதுத்துறையைச் சேர்ந்த விஜயா பேங்க், லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (எல்.ஐ.சி) நிறுவனத்துடன் கூட்டு மேற் கொண்டுள்ளது. இதன்படி, எல்.ஐ.சி., நிறுவனத்தின் ஆயுள் காப்பீட்டு திட்டங்களை, விஜயா பேங்க், அதன் வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்யும் முகமை அமைப்பாக செயல்படும்.இது குறித்து, விஜயா வங்கியின் உதவி, பொது மேலாளர் அசோக் குமார் ஷெட்டி கூறும்போது, 'வங்கிக்கு நாடு தழுவிய அளவில், ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட, 1,200 கிளைகள் உள்ளன. இவை, அனைத்திலுமாக, 80 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு, எல்.ஐ.சி., நிறுவனத்தின், தரம் வாய்ந்த ஆயுள் காப்பீட்டு திட்டங்களை வினியோகம் செய்ய முடியும். சென்னை, மண்டலத்தில் (தமிழ்நாடு, புதுச்சேரி, போர்ட்பிளேர்) 77 கிளைகள் உள்ளன.சென்னையில் மட்டும் வங்கிக்கு, 31 கிளைகள் உள்ளன. இவை அனைத்திலுமாக, எல்.ஐ.சி., நிறுவனத்தின் காப்பீட்டு திட்டங்களை சிறந்த முறையில் வினியோகம் செய்ய முடியும். இதன் வாயிலாக, வங்கியின் கட்டண அடிப்படையிலான வருவாய் அதிகரிக்கும்' என்று தெரிவித்தார்.இது குறித்து, எல்.ஐ.சி., நிறுவ னத்தின் மண்டல மேலாளர் எம். பிரசன்னன் கூறுகையில், 'பொதுத்துறையைச் சேர்ந்த எல்.ஐ.சி., நிறுவனமும், விஜயா வங்கியும் இணைந்து செயல்படும் நிலையில், அது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அளவில் பயனளிக்கும். எல்.ஐ.சி., நிறுவனம் ஆயுள் காப்பீட்டு வணிகத்தில், 75.68 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது.நிறுவனத்திற்கு நாடு தழுவிய அளவில், 2,048 கிளைகளும், 1,000க்கும் மேற்பட்ட விரிவாக்க கிளைகளும் உள்ளன. எல்.ஐ.சி., நிறுவனத்தின் ஆயுள் காப்பீட்டு திட்டங்களை வினியோகிப்பதன் வாயிலாக, விஜயா வங்கி வாடிக்கையாளர்கள் சிறந்த அளவில் பயன் பெறுவர்' என்று தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|