டெக்பெர்ரி நிறுவனம்வாட்ச் மொபைல் அறிமுகம்டெக்பெர்ரி நிறுவனம்வாட்ச் மொபைல் அறிமுகம் ... எல் அண்டு டி ஹோல்டிங்ஸ் நிறுவனம் ரூ.1,245 கோடிக்கு பங்கு வெளியீடு எல் அண்டு டி ஹோல்டிங்ஸ் நிறுவனம் ரூ.1,245 கோடிக்கு பங்கு வெளியீடு ...
விஜயா பேங்க் - எல்.ஐ.சியுடன் கூட்டு திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2011
01:29

சென்னை:பெங்களூரில் பதிவு அலுவலகத்தை கொண்டு செயல்பட்டு வரும், பொதுத்துறையைச் சேர்ந்த விஜயா பேங்க், லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (எல்.ஐ.சி) நிறுவனத்துடன் கூட்டு மேற் கொண்டுள்ளது. இதன்படி, எல்.ஐ.சி., நிறுவனத்தின் ஆயுள் காப்பீட்டு திட்டங்களை, விஜயா பேங்க், அதன் வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்யும் முகமை அமைப்பாக செயல்படும்.இது குறித்து, விஜயா வங்கியின் உதவி, பொது மேலாளர் அசோக் குமார் ஷெட்டி கூறும்போது, 'வங்கிக்கு நாடு தழுவிய அளவில், ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட, 1,200 கிளைகள் உள்ளன. இவை, அனைத்திலுமாக, 80 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு, எல்.ஐ.சி., நிறுவனத்தின், தரம் வாய்ந்த ஆயுள் காப்பீட்டு திட்டங்களை வினியோகம் செய்ய முடியும். சென்னை, மண்டலத்தில் (தமிழ்நாடு, புதுச்சேரி, போர்ட்பிளேர்) 77 கிளைகள் உள்ளன.சென்னையில் மட்டும் வங்கிக்கு, 31 கிளைகள் உள்ளன. இவை அனைத்திலுமாக, எல்.ஐ.சி., நிறுவனத்தின் காப்பீட்டு திட்டங்களை சிறந்த முறையில் வினியோகம் செய்ய முடியும். இதன் வாயிலாக, வங்கியின் கட்டண அடிப்படையிலான வருவாய் அதிகரிக்கும்' என்று தெரிவித்தார்.இது குறித்து, எல்.ஐ.சி., நிறுவ னத்தின் மண்டல மேலாளர் எம். பிரசன்னன் கூறுகையில், 'பொதுத்துறையைச் சேர்ந்த எல்.ஐ.சி., நிறுவனமும், விஜயா வங்கியும் இணைந்து செயல்படும் நிலையில், அது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அளவில் பயனளிக்கும். எல்.ஐ.சி., நிறுவனம் ஆயுள் காப்பீட்டு வணிகத்தில், 75.68 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது.நிறுவனத்திற்கு நாடு தழுவிய அளவில், 2,048 கிளைகளும், 1,000க்கும் மேற்பட்ட விரிவாக்க கிளைகளும் உள்ளன. எல்.ஐ.சி., நிறுவனத்தின் ஆயுள் காப்பீட்டு திட்டங்களை வினியோகிப்பதன் வாயிலாக, விஜயா வங்கி வாடிக்கையாளர்கள் சிறந்த அளவில் பயன் பெறுவர்' என்று தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)