பதிவு செய்த நாள்
25 ஜூலை2011
16:40
மும்பை: தொலைத்தொடர்பு, மருத்துவம் மற்றும் ஆட்டோமொபைல் பங்குகளின் ஏற்றம் காரணமாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 149 புள்ளிகள் அதிகரித்தது. வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, அமெரிக்க பொருளாதார சரிவு காரணமாக, சென்செக்ஸ் 51 புள்ளிகள் சரிவுடன் துவங்கியது. எனினும் ரிலையன்ஸ், பாரதி ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு துறை பங்குகள், மருத்துவம் மற்றும் ஆட்டோமொபைல் பங்குகள் விலை ஏற்றம் கண்டதையடுத்து, சென்செக்ஸ் 149 புள்ளிகள் அதிகரித்து 18871.29 புள்ளிகளில் முடிந்தது. இதே போல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 46.35 புள்ளிகள் அதிகரித்து 5680.30 புள்ளிகளாக இருந்தது. இன்றைய பங்கு வர்த்தகத்தில் ஆட்டோமொபைல் பங்குகள் 1 சதவீத வளர்ச்சியையும், தொடர்ந்து மருத்துவம், தொலை தொடர்பு பங்குகள் 0.8 சதவீத வளர்ச்சியையும் பெற்றிருந்தது. எனினும் நுகர்பொருள் பங்குகள் 1 சதவீத சரிவை சந்தித்தன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|