பதிவு செய்த நாள்
31 ஜூலை2011
03:06
சென்னை:நடப்பு வாரத்தின் தொடக்கத்தில், பங்குச் வர்த்தகம் சாதகமாக இருந்தது. ஆனால், செவ்வாயன்று, ரிசர்வ் வங்கி, அதன் காலாண்டு ஆய்வறிக்கையில் வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் உயர்த்தியது. இதனால், அன்றைய தினம், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 353 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. இது மட்டு மின்றி, உலக நிலவரங்களும், பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. வெள்ளியன்று, சென்செக்ஸ் 12 புள்ளி கள் சரிவடைந்து, 18,197 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 5 புள்ளிகள் குறைந்து, 5,482 புள்ளி களிலும் நிலை கொண்டன. திங்கள் முதல் வெள்ளி வரையிலான 5 வர்த்தக தினங்களில், 'சென்செக்ஸ்' மொத்தம் 674 புள்ளிகளும், 'நிப்டி' 198 புள்ளிகளும் சரிவடைந்தன. வங்கி துறைகள்: சென்ற ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், பொதுத்துறை வங்கிகளின் முடிவுகள், முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இல்லை. அதேசமயம், தனி யார் வங்கிகளின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தன. பொதுத்துறை வங்கிகளின் வசூலாகாத கடன் அதிகரித்துள்ளதால், அவ்வங்கிகள் அதிகளவில் ஒதுக்கீடு செய்ய வேண் டிய நிர்பந்தம் ஏற்பட்டது. காலாண்டு முடிவுகள்: விசாஸ்டீல், இந்தியன் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், வோல்டாஸ், அலோக் இண்டஸ்டீரீஸ், மஹிந்திரா பைனான்ஸ், மெக்லாய்ட் ரஸல், பி.டி.சி. இந்தியா பைனான்சியல் சர்வீசஸ், தாபர் இந்தியா, ஒ.எ.ன்.ஜி.சி., என்.எம். டி.சி. ஆகிய நிறுவனங்களின் லாபம், கடந்த ஆண்டின், காலாண்டை விட, நடப்பு நிதியாண்டின் காலாண்டில் அதிகரித் துள்ளது.சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் அண்டு சிந்து பேங்க், யூனிகெம், ஆகியவற்றின் லாபம் குறைந்துள்ளது. உருக்கு துறை நிறுவனங்கள்: உள்நாட்டில், உருக்கு துறையில் ஈடுபட்டு வரும், நிறுவனப் பங்குகளின் விலை வெள்ளி யன்று சரிவடைந்திருந்தது. கர்நாடக மாநிலம் பெல்லாரியில், இரும்புத்தாது எடுப்பதற்கு, சுப்ரீம் கோர்ட் தடைவிதித் துள்ளது.இதனால், அங்கு செயல்பட்டு வரும், அதானி, ஜிந்தால் ஸ்டீல் ஒர்க் ஆகிய நிறுவனப் பங்குளின் விலை மிகவும் குறைந்து போனது. என்ன பங்குகள் வாங்கலாம்?: நொய்டா டோல் பிரிட்ஜ், ஐ.டி.சி., பிரமல் ஹெல்த்கேர், மாரிக்கோ, ஐ.எல்.எப்.எஸ் இன் வெஸ்ட்மெண்ட்ஸ், கர்நாடகா பேங்க், கரூர் வைஸ்யா பேங்க் ஆகியவற்றின் பங்குகளை நீண்ட கால அடிப்படையில் வாங்க லாம். ஜூவல்லரி நிறுவனங்கள்: தங்க ஆபரணங்கள் துறையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் செயல்பாடு கடந்த சில காலா ண்டுகளாக, சிறப்பாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்து வருவதும், இதற்கான தேவை அதிகரித்து வருவதும் தான் இதற்கு காரணம். இதுமட்டுமின்றி, தங்கம் சார்ந்த முதலீட்டு திட்டங்களிலும், அதிகளவில் முதலீடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், இத்துறையைச் சேர்ந்த, ரெனேசான்ஸ் ஜூவல்லரி, கீதாஞ்சலி, தங்கமயில் ஜூவல்லரி, டைட்டான் ஆகிய நிறுவனங்களின் செயல்பாட்டு வளர்ச்சி நன்கு உள்ளது. வரும் வாரம் எப்படி?: அமெரிக்காவில் நிலவி வரும், பிரச்னைகளை அந்நாடு எப்படி சமாளிக்கப் போகிறது என்பது தெரியவில்லை. மேலும், அந்நாட்டிற்கான தரக் குறியீடு 'ஏஏஏ' என்ற நிலையிலேயே தொடருமா என்பதும் கேள்விக் குறியாக உள்ளது. இவற்றிற்கான விடை புதன்கிழமையன்று தெரிந்து விடும்.இது,சர்வதேச அளவில், பங்கு வர்த்த கத் தில், தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள், பங்கு வர்த்தகத்திற்கு சாதகமாக உள்ளது என்றாலும், பணவீக்கம் மற்றும் உலக நடப்புகள் சாதகமாக இல்லாததால் பங்கு வர்த்தகம் கீழே இறங்கிக் கொண்டுள் ளது. எனவே, முதலீட்டாளர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். சேதுராமன்சாத்தப்பன்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|