பதிவு செய்த நாள்
31 ஜூலை2011
03:07
மும்பை:லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனத்தின் துணை நிறுவனமான, எல் அண்டு டி பைனான்ஸ் ஹோல்டிங்ஸ் பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு மூலதனச் சந்தையில் களமிறங்கியது. இதன் பங்கு வெளியீடு வெள்ளிக் கிழமையுடன் நிறைவடைந்தது.இந்நிலையில், இந்நிறுவனத்தின் பங்குகள் வேண்டி, 5.64 மடங்கிற்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்நிறுவனம், பங்கு ஒன்றின் விலையை 51-59 ரூபாய் என்ற அளவில் நிர்ணயித்திருந்தது. இதன் பங்குகள் வேண்டி வந்த விண்ணப்பங்களில், அதிகம் பேர், உச்ச விலையான 59 ரூபாயில் விண்ணப் பித்துள்ளனர். எனவே, இந்நிறுவனம், அதன் பங்கின் வெளியீட்டு விலையை 59 ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யும் என, எதிர்பார்க்கப் படுகிறது.எல் அண்டு டி பைனான்ஸ் ஹோல்டிங்ஸ், இப்பங்கு வெளியீட்டின் வாயிலாக, 1,245 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம், இப்பங்கு வெளியீட்டிற்கு முன்பாக, கார்னர் ஸ்டோன் முதலீட்டாளர்களுக்கு பங்கு ஒதுக்கீட்டின் வாயிலாக, 3.60 கோடி டாலரையும், தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்க ளுக்கு, பங்குகளை ஒதுக்கி 7.50 கோடி டாலரையும் திரட்டிக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|