பதிவு செய்த நாள்
02 ஆக2011
02:25
மும்பை: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், 281 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 337 கோடி ரூபாயாக இருந்தது. ஆக, இவ்வங்கியின் நிகர லாபம், 16.6 சதவீதம் சரிவடைந்துள்ளது.இதே காலாண்டுகளில், இவ்வங்கியின் மொத்த வருவாய், 3,657.97 கோடியிலிருந்து, 4,840.14 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.வங்கியின் மொத்த வர்த்தகம், 2 லட்சத்து 62 ஆயிரத்து 120 கோடியில் இருந்து, 3 லட்சத்து 11 ஆயிரத்து 929 கோடி ரூபாயாக உயர்ந் துள்ளது. இதில், வங்கி திரட்டிய டெபாசிட், 20.27 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1 லட்சத்து 85 ஆயிரத்து 885 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.வங்கி அளித்த கடன்கள், 1 லட்சத்து 7 ஆயிரத்து 561 கோடியில் இருந்து, 1 லட்சத்து 26 ஆயிரத்து 44 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|