பதிவு செய்த நாள்
05 ஆக2011
00:12
சென்னை: ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், டீசலில் இயங்கும் 'செவர்லெ பீட்' காரை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.இதுகுறித்து, இந்நிறுவனத்தின் துணைத் தலைவர் (இந்தியா) பி. பாலேந்திரன் கூறியதாவது:தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள காரில், பவர்டிரைன் யூரோப் தொழில்நுட்பத்திலான, 1.0 எக்ஸ்.எஸ்.டீ.இ ஸ்மார்டெக் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, இந்திய வாடிக்கையாளர்களுக்கென்றே தனிப்பட்ட முறையில் வடிவமைப்பு செய்யப்பட்டதாகும். மேலும், டீசல் சிக்கனம்,மிக குறைந்த அளவு புகை வெளியிடும் தன்மை, ஹை டார்க் டிரான்ஸ்மிஷன் கியர் முறை, ஹைட்ராலிக் கிளட்ச் செயல்பாடு ஆகியவை இதன் சிறப்பு அம்சங்களாகும். இப்புதிய வகை கார், ஒரு லிட்டர் டீசலில், 24 கிலோமீட்டர் வரை செல்லக்கூடியது. இதன் விலை, மாடல்களுக்கேற்ப 4.35 லட்சம் முதல் 5.55 லட்சம் ரூபாய் வரை உள்ளது. இவ்வாறு பா@லந்திரன் தெரிவித்தார்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|