பதிவு செய்த நாள்
06 ஆக2011
15:26
புதுடில்லி : பிரிட்டானியா நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் 27.32 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்நிறுவனம் இன்று வெளியிட்ட அறிக்கையில், ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் பிரிட்டானியா நிறுவனம் ரூ.41.80 கோடி லாபம் ஈட்டி உள்ளது. பிஸ்கட் மற்றும் பால் பொருட்கள் விற்பனையின் மூலம் கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனம் ரூ.32.83 கோடியை மட்டுமே நிகரலாபமாக பெற்றுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பிரிட்டானியா நிறுவனத்தின் நிகர விற்பனை 21.36 சதவீதம் அதிகரித்து ரூ.1106.29 கோடியாக உள்ளது. தற்போது வீட்டா மேரி ஹரி ஓட்ஸ், பிரிட்டானியா கோர்மெட் சீஸ், டைகர் ஜோர் பாதாம் மில்க் உள்ளிட்ட புதிய தயாரிப்புக்களை புதிதாக அறிமுகம் செய்ய பிரிட்டானியா திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவன மேலாண் இயக்குநர் வினிதா பாலி தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|