பதிவு செய்த நாள்
11 ஆக2011
00:04
மும்பை: எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம், வீட்டு வசதிக் கடனுக்கான வட்டி விகிதத்தை, 0.50 சதவீதம் உயர்த்தியுள்ளது.இதன்படி, 30 லட்ச ரூபாய் வரையிலான, வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம், 10.65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 30 லட்சத்திற்கும் மேல், 75 லட்ச ரூபாய்க்கு குறைவாக உள்ள கடனுக்கான வட்டி , 11 சதவீதமாகவும், 75 லட்ச ரூபாய்க்கு @மற்பட்ட கடனுக்கான வட்டி, 11.50 சதவீதம் என்ற அளவிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சென்ற ஜூலை மாதம் 26ம் தேதி, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை, மேலும் 0.50 சதவீதம் உயர்த்தியது. இதையடுத்து, பல வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தை, 0.50 முதல் 0.75 சதவீதம் வரை உயர்த்தின. வீட்டு வசதிக்கு நிதிஉதவி வழங்கி வரும் எச்.டீ.எப்.சி. நிறுவனம் வீட்டு கடனுக்கான வட்டி விகிதத்தை சென்ற வாரம் 0.50 சதவீதம் உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|