ஆட்டோ பெர்மிட் நிறுத்தி வைப்பு: விதிமுறை தளர்வு எப்போது?ஆட்டோ பெர்மிட் நிறுத்தி வைப்பு: விதிமுறை தளர்வு எப்போது? ... நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் கிரெடிட் கார்டு பரிவர்த்தனை 30 சதவீதம் வளர்ச்சி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் கிரெடிட் கார்டு பரிவர்த்தனை 30 ... ...
'சென்செக்ஸ்' 71 புள்ளிகள் குறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஆக
2011
01:42

மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், நேற்று, அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், பல முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில், நாட்டின் உணவுப் பொருள் பணவீக்கம், 9.90 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்துள்ளது என்ற செய்தி வெளியானது. இதையடுத்து, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை, மீண்டும் உயர்த்தக்கூடும் என்ற அச்சப்பாடும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.நேற்று நடைபெற்ற பங்கு வர்த்தகத்தில், வங்கி, ரியல் எஸ்டேட், நுகர்வோர் சாதனங்கள் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்தது. இருப்பினும், நுகர் பொருள்கள், எண்ணெய், எரிவாயு, உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது.மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 71.11 புள்ளிகள் சரிவடைந்து, 17,059.40 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 17,207.82 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,012.95 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 21 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், 9 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும் இருந்தது. மும்பை பங்குச் சந்தையில், 2,930 நிறுவனப் பங்குகளின் மீது வர்த்தகம் நடைபெற்றது. இதில், 1,470 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், 1,319 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 141 நிறுவனப் பங்குகளின் விலை மாற்றமின்றி இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' வர்த்தகம் முடியும் போது, 22.70 புள்ளிகள் குறைந்து, 5,138.30 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,184.95 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,121 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)