பதிவு செய்த நாள்
12 ஆக2011
01:42
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், நேற்று, அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், பல முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில், நாட்டின் உணவுப் பொருள் பணவீக்கம், 9.90 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்துள்ளது என்ற செய்தி வெளியானது. இதையடுத்து, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை, மீண்டும் உயர்த்தக்கூடும் என்ற அச்சப்பாடும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.நேற்று நடைபெற்ற பங்கு வர்த்தகத்தில், வங்கி, ரியல் எஸ்டேட், நுகர்வோர் சாதனங்கள் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்தது. இருப்பினும், நுகர் பொருள்கள், எண்ணெய், எரிவாயு, உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது.மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 71.11 புள்ளிகள் சரிவடைந்து, 17,059.40 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 17,207.82 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,012.95 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 21 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், 9 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும் இருந்தது. மும்பை பங்குச் சந்தையில், 2,930 நிறுவனப் பங்குகளின் மீது வர்த்தகம் நடைபெற்றது. இதில், 1,470 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், 1,319 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 141 நிறுவனப் பங்குகளின் விலை மாற்றமின்றி இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' வர்த்தகம் முடியும் போது, 22.70 புள்ளிகள் குறைந்து, 5,138.30 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,184.95 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,121 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|