பதிவு செய்த நாள்
15 ஆக2011
13:39
புதுடில்லி : வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் பசுமை எரிவாயு திட்டத்தில் ஒரு மில்லியன் வேலைவாய்ப்புக்கள் அடுத்த 2 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட உள்ளது. சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு மக்களிடையே வளர்ந்து வருவது, சர்வதேச அளவில் கார்பன் மார்கெட்டுகள் வளர்ந்து வருவது, பசுமை திட்டத்தின் அடிப்படையிலான வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஆகிய காரணங்களால் சுற்றுசூழல் துறையில் வழக்கறிஞர்கள், கார்பன் பைனான்ஸ் ஆலோசகர், கட்டிட வடிவமைப்பாளர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட ஏராளமான பணி வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறியாளர், கட்டிட வடிவமைப்பாளர், மேலாண்மை உள்ளிட்ட பிரிவுகளின் கீழே அதிகளவில் பணி வாய்ப்புக்கள் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துறையில் மேலும் பல பணிகள் உருவாக்கப்பட உள்ளதாக பசுமை திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|