கிரிக்கெட் தோல்வியால் 'டிவி' விளம்பர கட்டணம் சரிவுகிரிக்கெட் தோல்வியால் 'டிவி' விளம்பர கட்டணம் சரிவு ... நடப்பாண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் துறைமுகங்களில் சரக்கு போக்குவரத்து 5 சதவீதம் உயர்வு நடப்பாண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் துறைமுகங்களில் சரக்கு ... ...
நடப்பாண்டு ஜூலை மாதத்தில் பணவீக்கம்9.22 சதவீதமாக குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2011
00:29

புதுடில்லி: மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும், நாட்டின் பொதுப் பணவீக்கம் சென்ற ஜூலை மாதத்தில், 9.22 சதவீதமாக சற்று குறைந்துள்ளது. இது, கடந்த ஜூன் மாதத்தில், 9.44 சதவீமாக இருந்தது. ஆகஸ்ட், ஜூன் மாதத்தை விட, ஜூலை மாதத்தில் 0.22 சதவீதம் குறைந்துள்ளது. நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவது, மத்திய அரசுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. இதை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, நாட்டின் பணப் புழக்கத்தை குறைக்கும் வகையில், கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ரிசர்வ் வங்கி, இதுவரையிலுமாக, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை, 11 முறை உயர்த்தியுள்ளது.கச்சா எண்ணெய் மற்றும் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரித்ததால் பணவீக்கம் உயர்ந்துள்ளது. கடந்த மே மாதத்தில், நாட்டின் பொதுப் பணவீக்கம், 9.06 சதவீதம் என்ற அளவில் இருந்தது என, முன்பு மதிப்பிடப்பட்டிருந்தது. இது, மறுமதிப்பீட்டில், 9.56 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போன்று, கடந்த ஏப்ரல் மாதத்திலும், முதலில் பொதுப் பணவீக்கம் 8.66 சதவீதமாகவும், மறுமதிப்பீட்டில் இது 9.74 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.கணக்கீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஜூலை மாதத்தில் முக்கிய பொருட்களின் விலையும், எரிபொருட்கள் பிரிவில், குறிப்பிட்ட சில எரிபொருட்களின் விலையும் குறைந்திருந்தது. அதேசமயம், தயாரிப்புத் துறை பொருட்கள் பணவீக்கம் 7.5 சதவீதமாக உயர்ந்திருந்தது. நடப்பாண்டு ஜூலை மாதத்தில், பணவீக்கம் சற்று குறைந்துள்ளது என்பது, ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இருப்பினும், உணவுப் பொருள் பணவீக்கம், ஜூலை 30ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 9.90 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது. இது, அதற்கு முந்தைய வாரத்தில், 8.04 சதவீதம் என்ற அளவில் மிகவும் குறைந்து காணப்பட்டது. ரிசர்வ் வங்கியின், நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டம் செப்., 16ம் தேதி நடைபெற உள்ளது. பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் நிலையில், வங்கிகளுக்கான வட்டி விகிதம், மேலும் உயர்த்தப்படலாம் என்ற அச்சப்பாடும் சந்தை வட்டாரத்தில் நிலவுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)