நடப்பாண்டு ஜூலை மாதத்தில் பணவீக்கம்9.22 சதவீதமாக குறைந்ததுநடப்பாண்டு ஜூலை மாதத்தில் பணவீக்கம்9.22 சதவீதமாக குறைந்தது ... ஏற்ற, இறக்கத்தில் பங்கு வர்த்தகம்'சென்செக்ஸ்' 109 புள்ளிகள் வீழ்ச்சி ஏற்ற, இறக்கத்தில் பங்கு வர்த்தகம்'சென்செக்ஸ்' 109 புள்ளிகள் வீழ்ச்சி ...
நடப்பாண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் துறைமுகங்களில் சரக்கு போக்குவரத்து 5 சதவீதம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2011
00:30

புதுடில்லி: இந்தியாவின் 12 துறைமுகங்களில், நடப்பு 2011-12ம் நிதியாண்டில், சென்ற ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில் 19 கோடி டன் அளவிற்கு சரக்கு போக்குவரத்து நடைபெற்றுள்ளது. இது,சென்ற நிதியாண்டின் இதே காலத்தில் 18 கோடி டன்னாக இருந்தது. ஆக, துறைமுகங்களில் சரக்கு போக்குவரத்து 4.84 சதவீதம் அதிகரித்துள்ளது.நாட்டின் முக்கிய துறைமுகங்களில் சரக்கு போக்குவரத்து ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. சென்ற 2011ம் ஆண்டு மார்ச் வரையிலான நான்கு நிதியாண்டுகளில், நாட்டின் 12 துறைமுகங்களில் கையாளப்பட்ட சரக்கு 21 சதவீதம் அதிகரித்து 57 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. நடப்பு 2011-12ம் நிதியாண்டில், சென்ற ஏப்ரல்-ஜூலை மாதங்களில், கோல்கட்டா மற்றும் ஹால்டியா துறைமுகங்கள் 1.60 கோடி டன் சரக்கை கையாண்டுள்ளன. இது, சென்ற ஆண்டு இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்டதை விட 7.66 சதவீதம் (1.46 கோடி டன்) அதிகமாகும்.மதிப்பீட்டு காலத்தில், பரதீப் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு 8.12 சதவீதம் அதிகரித்து 1.80 கோடி டன் என்ற அளவில் இருந்து 1.90 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. இதே போன்று விசாகப்பட்டினம் துறைமுகம் 2.40 கோடி டன் சரக்கை கையாண்டுள்ளது. இது,சென்ற நிதியாண்டின் இதே காலத்தை விட, 13.09 சதவீதம்(2.10 கோடி டன்) அதிகமாகும். சென்னையின் எண்ணூர் துறைமுகம் 42.36 லட்சம் டன் சரக்கை கையாண்டுள்ளது. இது, சென்ற ஆண்டு இதே காலத்தில் கையாளப்பட்டதை விட 47.60 சதவீதம் (28.70 லட்சம் டன்) அதிகமாகும்.சென்னை துறைமுகம், சென்ற ஏப்ரல்-ஜூலை மாதங்களில் 2 கோடி டன் சரக்கை கையாண்டுள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தில் 2.10 கோடி டன்னாக இருந்தது. ஆக, சென்ற ஆண்டை விட நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், சரக்கு போக்குவரத்து 4.81 சதவீதம் குறைந்துள்ளது. தூத்துக்குடி துறைமுகம், இதே மாதங்களில் கையாண்ட சரக்கின் அளவு 18.91 சதவீதம் அதிகரித்து 79.58 லட்சம் டன்னில் இருந்து, 94.63 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இதே மாதங்களில், கொச்சி துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு 3.88 சதவீதம் உயர்ந்து 60.83 லட்சம் டன்னில் இருந்து, 63.19 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. புதிய மங்களுர் துறைமுகம் இதே மாதங்களில் கையாண்ட சரக்கு 1.06 கோடி டன் என்ற அளவில் இருந்து, 1.14 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.மர்மகோவா துறைமுகம் சென்ற ஏப்ரல்-ஜூலை மாதங்களில் 1.36 கோடி டன் சரக்கை கையாண்டுள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே மாதங்களில் கையாண்டதை விட 5.94 சதவீதம் (1.45 கோடி டன் குறைவாகும். ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலத்தில், மும்பை துறைமுகத்தின் சரக்கு போக்குவரத்து சரிவடைந்துள்ளது. இத்துறைமுகம், 1.80 கோடி டன் சரக்கை கையாண்டுள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்டதை விட, 3.83 சதவீதம் (1.87 கோடி டன்) குறைவாகும்.இதே மாதங்களில், ஜவகர்லால் நேரு துறைமுகம் கையாண்ட சரக்கு அளவு, 1.26 சதவீதம் அதிகரித்து 2.13 கோடி டன் என்ற அளவில் இருந்து, 2.15 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.கண்ட்லா துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவும் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது. இத்துறைமுகம், சென்ற ஏப்ரல்-ஜூலை மாதங்களில் 2.82 கோடி டன் சரக்கை கையாண்டுள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தில் கையாண்டதை விட 6.96 சதவீதம் (2.63 கோடி டன்) அதிகமாகும்.நாட்டின் முக்கிய துறைமுகங்களில் சரக்கு போக்குவரத்து ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி பெற்று வருகிறது. ஆனால், இதற்கு ஈடு கொடுக்கும் விதத்தில், இத்துறைமுகங்களில் சரக்கு கையாளும் திறன் மேம்படுத்தப்படாமல் உள்ளது. சென்ற 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் முக்கிய 12 துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன், சராசரியாக 88 சதவீத அளவிற்கே இருந்தது. எனினும், இது சர்வதேச அளவில் நிர்ணயிக்கப்பட்ட 70 சதவீதத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறனை மேம்படுத்த, போதுமான நிதி ஆதாரங்கள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்கான அனுமதியை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாசார ஆய்வுக் குழு தாக்கல் செய்த இந்த அறிக்கையின் அடிப்படையில், மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், துறைமுகங்களில் சரக்கு கையாளும் திறன் மேலும் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)