அமெரிக்காவில் இந்திய மாம்பழத்திற்கு மவுசுஅமெரிக்காவில் இந்திய மாம்பழத்திற்கு மவுசு ... எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ் இந்தியா:ரூ.20,000 கோடி வருவாய் ஈட்ட இலக்கு எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ் இந்தியா:ரூ.20,000 கோடி வருவாய் ஈட்ட இலக்கு ...
ஜூன் மாதத்தில் தனிநபர் கடன் 17 சதவீதம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஆக
2011
03:01

புதுடில்லி:நாட்டின் பணவீக்கம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி, கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இதுவரையிலுமாக, வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை 11 முறை உயர்த்தியுள்ளது. இதைத்தொடர்ந்து வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதமும், பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால், தனிநபர், வீட்டு வசதி, மற்றும் வாகன கடன் வாங்குவது குறைந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதற்கு மாறாக, கடந்த 2010ம் ஆண்டு, ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலத்தை விட, நடப்பு 2011ம் ஆண்டின் இதே காலத்தில், தனிநபர் கடன் சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளி யிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக, சென்ற ஜூன் மாதத்தில், வங்கிகள் வழங்கிய தனி நபர் கடன், 6 லட்சத்து 95 ஆயிரத்து 257 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில் வழங்கப்பட்ட தொகையை விட, 17.3 சதவீதம் அதிகம். கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்த அளவு 6.6 சதவீதமாக வளர்ச்சி கண்டிருந்தது.நுகர்வோர் சாதனங் கள், வீட்டு வசதி, கல்வி, வாகனம் போன்றவற்றிற்கு வழங்கப்படும் கடன்களை, தனிநபர் கடன்களாக ரிசர்வ் வங்கி வகைப்படுத்தியுள்ளது. இது தவிர, வைப்பு நிதி மற்றும் நிறுவனப் பங்குகளை அடமானமாக பெற்று வழங்கப் படும் கடனும் இப்பிரிவில் இடம் பெறுகிறது. தனிநபர் கடன் பிரிவில், வீட்டு வசதி கடன் அதிக பங்களிப்பை கொண்டுள்ளது. இதற்காக, சென்ற ஜூன் மாதத்தில் வழங்கப்பட்ட கடன்,17 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. மேலும், வாகன கடன் மற்றும் கல்விக் கடனும் முறையே 18 சதவீதம் மற்றும் 23 சதவீதம் என்ற அளவில், இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளன. இது குறித்து தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'பொதுவாக, முதலீட்டாளர்கள், வீட்டு வசதி, நுகர்வோர் மற்றும் வீட்டு உபயோக சாதனங்கள் வாங்குவதை ஒத்திப்போடுவதில்லை. வட்டி விகிதம் உயர்வது குறித்து, இவர்கள் அச்சப்படுவதில்லை.இருப்பினும், ஒரு சில முதலீட்டாளர்கள் வட்டி செலவினம் அதிகரிக்கும் போது, சாதனங்கள் வாங்குவதைஒத்திப்போடுகின்றனர்' என்று தெரிவித்தார். ரிசர்வ் வங்கியின் கவர்னர் டீ.சுப்பாராவ், ஜூலை 26ம் தேதி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்திய போது, சில புள்ளி விவரங்களை வெளியிட்டார். அதில், தனிநபர் வருவாய் குறையவில்லை. வட்டி செலவினம் அதிகரிப்பால், நுகர்வோர் சாதனங்கள் வாங்குவதை குறைக்கவில்லை.இதற்கு எடுத்துக்காட்டாக, கடந்தாண்டு ஒட்டு மொத்த அளவில் பணியாளர்களுக்கான சம்பளம் 20 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேசமயம், நுகர்வோர் பணவீக்கம் 10 சதவீதம் என்ற அளவில்தான் உயர்ந்துள்ளது. மக்களின் செலவிடும் வருவாய் அதிகரித்துள்ளதால், வட்டி செலவினம் குறித்து கவலை கொள்வதில்லை என, அந்த புள்ளி விவரத்தில் தெரிவிக்கப் பட்டிருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)